தென்னாப்ரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்


தென்னாப்ரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2017 11:04 AM GMT (Updated: 27 Jun 2017 11:04 AM GMT)

தென்னாப்ரிக்காவின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்ரிக்காவின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் வருகிற ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் வாரியத்துடனான பேச்சுவார்த்தைக்கு பின் அவரது முடிவை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதம் இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் போட்டியே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 50க்கும் அதிகமான சராசரியோடு 8000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். இதில் 21 சதங்களும் அடங்கும். 

ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி 2019ம் ஆண்டு உலக கோப்பையை தென்னாப்ரிக்கா வெல்ல உதவியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரேம் ஸ்மித்:-

"ஏபி கடந்த ஆண்டே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்ததாகவும், கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளால் தொடர்ந்து விளையாடினார். முடிந்தவரை அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பம்”. அவர் தென்னாப்ரிக்காவிற்காக பல தியாகங்களையும் சாதனைகளையும் செய்துள்ளார். தற்போதைய சூழலில் அடுத்து நடக்க இருக்கும் உலககோப்பையை வெல்வதே அவரது குறிக்கோளாக இருக்கும்" என கூறியுள்ளார்.

டிவில்லியர்ஸின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story