இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி விண்ணப்பிக்க விருப்பம்


இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி விண்ணப்பிக்க விருப்பம்
x
தினத்தந்தி 28 Jun 2017 10:01 AM GMT (Updated: 28 Jun 2017 10:01 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி விண்ணப்பிக்க உள்ளார்.

புதுடெல்லி,

கும்ப்ளே பதவி விலகியபின் காலியாக உள்ள தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வருகிற ஜூலை 9ம் தேதி வரை வரவேற்கபடுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. இப்பதவிக்கு சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புட், தோத கணெஷ், ரிச்சர்டு பைபஸ் ஆகியோர் ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தனர். 

இவர்களோடு இந்திய அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரியும் விண்ணப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை பற்றி பேசிய ரவி சாஸ்திரி கேப்டன் கோலியும் அணி நிர்வாகமும் கேட்டு கொண்டால் விண்ணப்பிக்க தயார் என கூறி இருந்தார். 

இந்நிலையில் தற்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் சச்சின் மட்டும் கேப்டன் கோலி உடன் பேசிய பிறகே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story