துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார், டோனி


துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார், டோனி
x
தினத்தந்தி 16 Aug 2017 10:15 PM GMT (Updated: 16 Aug 2017 9:46 PM GMT)

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயை சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை துபாயில் தொடங்க இருக்கிறார்.

புதுடெல்லி,

எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என்று இந்த பயிற்சி மையத்துக்கு பெயர் சூட்டப்படுகிறது. படிப்படியாக இந்த கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டோனியும் சேர இருக்கிறார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியாவில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் டோனி வெளிநாட்டில் தொடங்க உள்ளார்.


Next Story