ஹர்திக் பாண்டியா சிறப்பான வீரர்: சங்ககாரா புகழாரம்


ஹர்திக் பாண்டியா சிறப்பான வீரர்:  சங்ககாரா புகழாரம்
x
தினத்தந்தி 25 Sep 2017 11:46 AM GMT (Updated: 25 Sep 2017 11:46 AM GMT)

ஹர்திக் பாண்டியா சிறப்பான வீரர் என இலங்கை வீரர் சங்ககாரா புகழாரம்

இந்தியாவின் ஹர்திக் பாண்டியா சிறப்பான வீரர் என குமார் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது.

நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய வீரர் பாண்டியா, 72 பந்துகளில் 78 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.இந்நிலையில் பாண்டியாவையும், இந்திய அணியையும் புகழ்ந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில், இந்திய அணி குதிரை பாய்ச்சலில் தொடரை கைப்பற்றியுள்ளது, ஹர்திக் பாண்டியா சிறப்பான வீரராக உள்ளார்.எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற அணியாக இந்தியா உள்ளது என குறிப்பிட்டுள்ளார். சங்ககாராவின் பதிவுக்கு ஹர்திக் பாண்டியா நன்றி தெரிவித்துள்ளார்.



Next Story