ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல் சேர்ப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல் சேர்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2017 11:00 PM GMT (Updated: 25 Sep 2017 8:23 PM GMT)

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் வருகிற 28–ந் தேதியும், 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாக்பூரில் அக்டோபர் 1–ந் தேதியும் நடக்கிறது.

புதுடெல்லி,

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் வருகிற 28–ந் தேதியும், 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாக்பூரில் அக்டோபர் 1–ந் தேதியும் நடக்கிறது. இந்த இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 முதலாவது ஒருநாள் போட்டிக்கு முந்தைய நாள் பயிற்சியின் போது கணுக்காலில் காயம் அடைந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேலுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். அந்த இடத்துக்கு அக்‌ஷர் பட்டேல் திரும்பி இருக்கிறார். மற்றபடி அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. உடல் நலமில்லாத மனைவியை கவனிக்க வேண்டியது இருப்பதாக ஷிகர் தவான் கேட்டுக்கொண்டதால் அவர் பெயர் அணியில் இடம் பெறவில்லை.


Next Story