சிக்சர் அடிப்பதில் ரோகித் சர்மா புதிய உலக சாதனை


சிக்சர் அடிப்பதில் ரோகித் சர்மா புதிய உலக சாதனை
x
தினத்தந்தி 9 Oct 2017 10:22 AM GMT (Updated: 9 Oct 2017 10:22 AM GMT)

சிக்சர் அடிப்பதில் ரோகித் சர்மா புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20  ஓவர் போட்டியில் ஒரு சிக்சர் அடித்த ரோகித் சர்மா சிக்சர் விளாசுவதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் 6 பந்துகளை எதிர் கொண்ட இந்திய வீரர் ரோகித் சர்மா தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார், அவர் அடித்த ஒரு சிக்சர் மூலம் சர்வதேச அரங்கில் சிக்சர் மன்னனாக உலக சாதனை படைத்துள்ளார். அதாவது, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் 30 சிக்சர்களுக்கு மேல் அடித்த  முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை ரோகித் சர்மா படைத்துள்ளார். முன்னதாக நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம் தொடர்ந்து 4 ஆண்டுகள் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்த ஆண்டில் ரோகித் சர்மா மொத்தம் 30 சிக்சர்களை விளாசியுள்ள நிலையில், அதில் 29 சிக்சர்கள் ஒருநாள் போட்டியிலும், ஒரு சிக்சர் டி20 போட்டியிலும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story