வாஷிங்டன் சுந்தர் 156 ரன்கள் குவிப்பு


வாஷிங்டன் சுந்தர் 156 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2017 10:30 PM GMT (Updated: 15 Oct 2017 8:41 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு- திரிபுரா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

முதலில் 7 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்திருந்த திரிபுரா அணி 2-வது நாளான நேற்று சிறிது நேரத்தில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கே.விக்னேஷ் 4 விக்கெட்டுகளும், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தமிழக அணி சிறப்பாக தொடங்கி உள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரும், ஆல்-ரவுண்டருமான வாஷிங்டன் சுந்தர் 156 ரன்களுடனும் (223 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்), பாபா இந்த்ராஜித் 73 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 18 வயதான வாஷிங்டன் சுந்தர், முதல்தர கிரிக்கெட்டில் அடித்த முதல் செஞ்சுரி இதுவாகும். 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Next Story