லா லிகா கால்பந்து மெஸ்சி கோலால் பார்சிலோனா அணி வெற்றி 3–2 கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது


லா லிகா கால்பந்து மெஸ்சி கோலால் பார்சிலோனா அணி வெற்றி 3–2 கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது
x
தினத்தந்தி 24 April 2017 10:45 PM GMT (Updated: 24 April 2017 8:13 PM GMT)

லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

மாட்ரிட்,

முன்னணி கிளப்புகளான பார்சிலோனா–ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின. ரியல் மாட்ரிட் அணி 28–வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் காஸ்மிரோ இந்த கோலை அடித்தார். 33–வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி அபாரமாக கோல் அடித்து சமநிலை ஏற்படுத்தினார். 73–வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் இவான் ராகிடிச் அடித்த கோலால் அந்த அணி முன்னிலை பெற்றது. செர்ஜியோ ரமோஸ், மெஸ்சியை விதிமுறைக்கு மாறாக தடுத்ததால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 10 வீரர்களுடன் விளையாடியது. 86–வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கோல் திருப்பினார். இதனால் 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலை உருவானது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (இஞ்சுரி டைம்) பார்சிலோனா அணி வீரர் லயோனல் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இது பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடித்த 500–வது கோலாகும். முடிவில் பார்சிலோனா அணி 3–2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை சாய்த்தது. 33–வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா அணி 23–வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.


Next Story