தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக கமல்ஹாசன் நியமனம்
5-வது புரோ கபடி லீக் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்டு தமிழ் தலைவாஸ் என்ற அணி முதல்முறையாக களம் காணுகிறது.
சென்னை,
5-வது புரோ கபடி லீக் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்டு தமிழ் தலைவாஸ் என்ற அணி முதல்முறையாக களம் காணுகிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை இணை உரிமையாளராக கொண்டுள்ள இந்த அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், ‘கபடி விளையாட்டுடன் இணைவதை கவுரவமாக கருதுகிறேன். நமது முன்னோர்களால் வளர்க்கப்பட்ட கபடி அணியினருடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். தமிழ் தலைவாஸ் அணி பெயரையும், புகழையும் பெற வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
5-வது புரோ கபடி லீக் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்டு தமிழ் தலைவாஸ் என்ற அணி முதல்முறையாக களம் காணுகிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை இணை உரிமையாளராக கொண்டுள்ள இந்த அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், ‘கபடி விளையாட்டுடன் இணைவதை கவுரவமாக கருதுகிறேன். நமது முன்னோர்களால் வளர்க்கப்பட்ட கபடி அணியினருடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். தமிழ் தலைவாஸ் அணி பெயரையும், புகழையும் பெற வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story