ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது சென்னை அணி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது சென்னை அணி
x
தினத்தந்தி 19 Nov 2017 9:04 PM GMT (Updated: 19 Nov 2017 9:04 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை சென்னையின் எப்.சி. அணி ஏமாற்றத்துடன் தொடங்கி இருக்கிறது.

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை சென்னையின் எப்.சி. அணி ஏமாற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. தனது முதல் ஆட்டத்தில் 2–3 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் தோல்வியை தழுவியது.

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தொடரின் 3–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கோவா எப்.சி.யை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை எதிர்கொண்டது.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் கோவா அணி 3–2 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு தினமாகும். சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் 23–ந்தேதி இதே மைதானத்தில் கவுகாத்தி அணியை சந்திக்கிறது.

Next Story