ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியிடம் வீழ்ந்தது புனே


ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியிடம் வீழ்ந்தது புனே
x
தினத்தந்தி 22 Nov 2017 9:00 PM GMT (Updated: 22 Nov 2017 7:04 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 5–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி, எப்.சி. புனே சிட்டியை எதிர்கொண்டது.

புனே,

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 5–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி, எப்.சி. புனே சிட்டியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் பந்து அதிகமான நேரம் டெல்லி அணியின் (59 சதவீதம்) பக்கம் வலம் வந்தாலும், முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை. ஆனால் 2–வது பாதி தொடங்கிய உடனே டெல்லி அணி கோல் போட்டது. 46–வது நிமிடத்தில் இடது பகுதியில் இருந்து டெல்லி வீரர் ரால்ட் அடித்த ஷாட்டை, சக வீரர் பாலினோ டையாஸ் தலையால் முட்டி கோலாக்கினார். தொடர்ந்து 54–வது நிமிடத்தில் லாலியன் ஜூவாலா சான்ஜ்டே, 65–வது நிமிடத்தில் மதியாஸ் மிராபாஜ் ஆகிய டெல்லி வீரர்களும் கோல் அடிக்க, உள்ளூர் அணியான புனே அதிர்ச்சிக்குள்ளானது.

இதன் பிறகு புனே வீரர்களில் எமிலியானோ அல்பாரோ 67–வது நிமிடத்திலும், மார்கஸ் டெபார் கடைசி நிமிடத்திலும் கோல் திருப்பி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தனர். முடிவில் டெல்லி அணி 3–2 என்ற கோல் கணக்கில் புனேயை தோற்கடித்தது.


Next Story