ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை ஊதித்தள்ளியது புனே


ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை ஊதித்தள்ளியது புனே
x
தினத்தந்தி 30 Dec 2017 10:45 PM GMT (Updated: 30 Dec 2017 7:10 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே சிட்டி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) ஊதித்தள்ளியது.

புனே,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி 5-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) ஊதித்தள்ளியது. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய புனே அணியில் ஆஷிக் குருனியன் (8-வது நிமிடம்), மார்செலோ பெரேரா (27, 45, 86-வது நிமிடம்), அடில் கான் (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். 8-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணிக்கு இது 5-வது வெற்றியாகும். கவுகாத்திக்கு விழுந்த 5-வது அடியாகும்.

இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Next Story