மாநில ஆக்கி போட்டி: சாய், ஐ.சி.எப். அணிகள் வெற்றி


மாநில ஆக்கி போட்டி: சாய், ஐ.சி.எப். அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 12 March 2017 11:00 PM GMT (Updated: 12 March 2017 7:23 PM GMT)

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான அழைப்பு ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

 2–வது நாளான நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் சாய் அணி 3–2 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி. அலுவலக அணியை வீழ்த்தியது. ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருக்கையில் சரவணகுமார் அடித்த கோல், சாய் அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.

ஐ.சி.எப்.– தமிழ்நாடு போலீஸ் அணிகள் இடையிலான மற்றொரு விறுவிறுப்பான ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 3–3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்–அவுட்டில் ஐ.சி.எப். அணி 4–3 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வென்றது.


Next Story