ஜோஹர் கோப்பை ஆக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது


ஜோஹர் கோப்பை ஆக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது
x
தினத்தந்தி 28 Oct 2017 8:39 PM GMT (Updated: 28 Oct 2017 8:39 PM GMT)

6 அணிகள் இடையிலான 7–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இந்திய அணி நேற்று தனது கடைசி லீக்கில் இங்கிலாந்துடன் மோதியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியு

ஜோஹர்பாரு,

6 அணிகள் இடையிலான 7–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இந்திய அணி நேற்று தனது கடைசி லீக்கில் இங்கிலாந்துடன் மோதியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற சிக்கலுடன் களம் இறங்கிய இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து வீரர்கள் டாம் சோர்ஸ்பி (20–வது நிமிடம்), கேப்டன் ஜாக் வாலெர் (52–வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்திய தரப்பில் ரவ்‌ஷன் குமார் (25–வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார். தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி கண்ட இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் (4 வெற்றி, ஒரு தோல்வி) இன்று மோதுகிறது. 3 வெற்றி, 2 தோல்வியுடன் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய அணி அடுத்து 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியாவுடன் விளையாட இருக்கிறது.


Next Story