இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் முதல் சுற்றில் ஜோஸ்னா வெற்றி
இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில்
லண்டன்,
இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11–6, 8–11, 11–6, 12–10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ராச்செல் கிரின்ஹாமை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா அடுத்த ஆட்டத்தில் எகிப்தின் ரனிம் எல் வெலிலியை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீராங்கனை தீபிகா பலிக்கல் 4–11, 5–11, 13–11, 1–11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் லாரா மாசாரோவிடம் தோற்று வெளியேறினார். முன்னதாக இந்திய வீரர் சவுரவ் கோஷல் தகுதி சுற்றுடன் நடையை கட்டினார்.
Next Story