குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் புதிய தேசிய சாதனை


குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் புதிய தேசிய சாதனை
x
தினத்தந்தி 24 April 2017 9:45 PM GMT (Updated: 24 April 2017 8:19 PM GMT)

ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

ஜின்ஹூ,

பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார். 2015–ம் ஆண்டில் மன்பிரீத் கவுர் 17.96 மீட்டர் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அவர் தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்து புதிய தேசிய சாதனை படைத்தார்.


Next Story