ஆசிய ஸ்குவாஷ் போட்டி இந்திய வீரர், வீராங்கனை வெற்றி


ஆசிய ஸ்குவாஷ் போட்டி இந்திய வீரர், வீராங்கனை வெற்றி
x
தினத்தந்தி 26 April 2017 8:41 PM GMT (Updated: 26 April 2017 8:40 PM GMT)

இந்திய ஸ்குவாஷ் பெடரே‌ஷன் சார்பில் 19–வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை,

இந்திய ஸ்குவாஷ் பெடரே‌ஷன் சார்பில் 19–வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. 30–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோ‌ஷல் 11–2, 11–3, 11–5 என்ற நேர்செட்டில் சிங்கப்பூர் வீரர் பென்டிட் ஷானை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் வேலவன் செந்தில்குமார், விக்ரம் மல்கோத்ரா ஆகியோர் வெற்றி பெற்றனர். பெண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா 11–4, 1108, 11–8 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் ஷோ யுராவை வீழ்த்தினார்.


Next Story