1,200 பேர் பங்கேற்கும் தேசிய ஓபன் தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்


1,200 பேர் பங்கேற்கும் தேசிய ஓபன் தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 23 Sep 2017 10:15 PM GMT (Updated: 23 Sep 2017 6:50 PM GMT)

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

 இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டிக்கான தமிழக அணியில் 41 வீரர்களும், 35 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர். நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி துறை முதன்மை தலைமை கமிஷனர் சி.பி.ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

Next Story