ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் கரோலினா மரின்
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ,
இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்), உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொள்வதாக இருந்தது.
காயம் காரணமாக கடைசி நேரத்தில் நஜோமி ஒகுஹரா போட்டியில் இருந்து விலகியதால் கரோலினா மரின் களம் இறங்காமலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சீனாவின் ஹி பிங்ஜியாவை சந்திக்கிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 21-14, 15-21, 19-21 என்ற செட் கணக்கில் தகுரோ ஹோகி-சயகா ஹிரோடா (ஜப்பான்) இணையிடம் தோற்று வெளியேறியது.
இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்), உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொள்வதாக இருந்தது.
காயம் காரணமாக கடைசி நேரத்தில் நஜோமி ஒகுஹரா போட்டியில் இருந்து விலகியதால் கரோலினா மரின் களம் இறங்காமலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சீனாவின் ஹி பிங்ஜியாவை சந்திக்கிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 21-14, 15-21, 19-21 என்ற செட் கணக்கில் தகுரோ ஹோகி-சயகா ஹிரோடா (ஜப்பான்) இணையிடம் தோற்று வெளியேறியது.
Related Tags :
Next Story