டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்:சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் பங்கேற்பு


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்:சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Oct 2017 10:00 PM GMT (Updated: 16 Oct 2017 7:48 PM GMT)

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்செ நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.

ஒடென்செ,

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்செ நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில், ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, உலக தர வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை சென் யுபெய்யை சந்திக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு சமீபத்தில் நடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்கிறார். ஜப்பான் ஓபன் போட்டியில் 2-வது சுற்றில் கரோலினா மரினிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க சாய்னாவுக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த், தனது முதல் சுற்றில் தகுதி சுற்று மூலம் முன்னேறும் வீரரை சந்திக்கிறார். முதல் 2 சுற்றுகளை ஸ்ரீகாந்த் கடந்தால், உலக சாம்பியனும், உள்ளூர் வீரருமான விக்டர் ஆக்சல்சென்னுடன் மோத நேரிடும். மற்ற இந்திய வீரர்களான பிரனாய், சாய் பிரனீத் முறையே டென்மார்க்கின் இமில் ஹோல்ஸ்டையும், ஹன்ஸ் கிறிஸ்டியனையும் சந்திக்கிறார்கள். மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா, தகுதி சுற்று வீரரை எதிர்கொள்கிறார்.

Next Story