புரோ கபடி லீக்: ‘பிளே-ஆப்’ சுற்று இன்று தொடக்கம்


புரோ கபடி லீக்: ‘பிளே-ஆப்’ சுற்று இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 22 Oct 2017 8:14 PM GMT (Updated: 22 Oct 2017 8:14 PM GMT)

5-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை,

5-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முறையே முதல் 3 இடங்களை பிடித்த குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (87 புள்ளிகள்), புனேரி பால்டன் (80 புள்ளிகள்), அரியானா ஸ்டீலர்ஸ் (79 புள்ளிகள்) அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மும்பை, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி அணிகள் வெளியேறின. ‘பி’ பிரிவில் முறையே முதல் 3 இடங்களை பிடித்த பெங்கால் வாரியர்ஸ் (77 புள்ளிகள்), பாட்னா பைரட்ஸ் (71 புள்ளிகள்), உத்தரபிரதேச யோத்தா (60 புள்ளிகள்) அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து நடையை கட்டின. 2 நாள் ஓய்வுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டம் தொடங்குகிறது.

மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதலாவது எலிமினேட்டர் சுற்று (வெளியேற்றுதல் சுற்று) ஆட்டத்தில் புனேரி பால்டன்-உத்தரபிரதேச யோத்தா அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டங்களில் தோல்வி அடையும் அணிகள் போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணிகள் நாளை நடைபெறும் 3-வது மற்றும் கடைசி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மோதும்.

Next Story