உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து


உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து
x
தினத்தந்தி 16 Dec 2017 11:00 PM GMT (Updated: 16 Dec 2017 8:10 PM GMT)

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து 10-வது உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நடந்து வருகிறது.

துபாய்,

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யுபியுடன் மோதினார். 59 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-15, 21-18 என்ற நேர் செட்டில் சென் யுபியை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் அகானே யமாகுச்சி (ஜப்பான்) 17-21, 21-12, 21-19 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனோனை சாய்த்தார்.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, யமாகுச்சியை சந்திக்கிறார். ஏற்கனவே லீக்கில் சிந்து நேர் செட்டில் யமாகுச்சியை வீழ்த்தி இருந்தார். சிந்துவின் வெற்றிப்பயணம் இறுதிப்போட்டியிலும் நீடித்தால், கவுரவமிக்க இந்த போட்டியில் மகுடம் சூடிய முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார்.

Next Story