ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் தோல்வி


ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் தோல்வி
x
தினத்தந்தி 22 Nov 2017 8:30 PM GMT (Updated: 22 Nov 2017 6:59 PM GMT)

பெங்களூரு ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

பெங்களூரு ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2–வது சுற்றில் இந்திய வீரர் ராம்குமார், இங்கிலாந்தின் ஜாய் கிளார்க்குடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 7–6 (3), 2–6, 4–6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

மற்றொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6–2, 7–6 (0) என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டினசை வெளியேற்றி கால்இறுதியை எட்டினார். சுமித் நாகல், பிரஜ்னேஸ் குணேஸ்வரன் ஆகிய இளம் இந்திய வீரர்களும் தங்களது 2–வது சுற்றில் வெற்றி கண்டனர்.


Next Story