சீனாபுரம் சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 3 Dec 2021 8:46 PM GMT (Updated: 3 Dec 2021 8:46 PM GMT)

சீனாபுரம் சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.

பெருந்துறை
சீனாபுரம் சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது. 
சீனாபுரம் கால்நடை சந்தை
பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு திங்களூர், சென்னிமலை, காஞ்சிக்கோவில், அறச்சலூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மோர்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களுடைய பசு மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 20-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 80-ம், சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 30-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.  
ரூ.25 லட்சம்
இதில் விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்கப்பட்டது. சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. 
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறுகையில், ‘தொடர் மழை காரணமாக, சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்திருந்தது. இதேபோல் வெளியூரில் இருந்து அதிக அளவுக்கு வியாபாரிகளும் வரவில்லை. இதன்காரணமாக 50 சதவீதம் மாடுகளே விற்பனை ஆகின. மாடுகள் மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு விற்பனை ஆனது,’ என்றனர்.  
பெருந்துறை, குன்னத்தூர், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விலைபேசி பிடித்து சென்றனர்.

Next Story