வளர்ச்சி கூடும் நாள். காரியவெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் வாங்குவது சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும்.
9.4.2021 முதல் 15.4.2021 வரை
தடை, தாமதங்களை தவிர்க்க இயலாது. உத்தியோகஸ்தர்கள், பொறுப்பில் உள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தொழில் செய்பவர்கள், குறித்த நேரத்தில், பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பம் சீராக நடைபெற்று வரும். பிள்ளைகளின் மேற்படிப்புக்காக அதிக அளவில் பணம் செலவாகக்கூடும். இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டி வழிபடுங்கள்.
பங்குனி மாத ராசிபலன்கள் 14.3.2021 முதல் 13.4.2021 வரை
கும்ப ராசி நேயர்களே!
சார்வரி வருடம் பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மேலும் தனாதிபதியான குருவும் விரய ஸ்தானத்தில் இருக்கின்றார். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மார்ச் 18-ந் தேதி, உங்கள் ராசிக்கு 2-ம் இடமான மீனத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார். அங்கு அவர் உச்சம் பெறுகின்றார். 4, 9-க்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெறும் பொழுது, நன்மைகள் அதிகம் நடைபெறும். உடல் நலம் சீராகும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். பங்காளிப் பகை மாறும். பாகப்பிரிவினையில் ஏற்பட்ட தாமதங்கள் அகலும். புதிய வாய்ப்புகள் பலவற்றையும் வரவழைத்துக் கொள்வீர்கள்.
மீன புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி, மீன ராசிக்கு புதன் செல்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பஞ்சமாதிபதி நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். சொந்தங்களின் மூலம் சில பிரச்சினைகள் வரலாம். முக்கியப் பணி ஒன்றை செய்ய மறந்ததன் விளைவாக முன்னேற்றத் தடை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
கும்ப குருவின் சஞ்சாரம்
ஏப்ரல் 5-ந் தேதி, குரு பகவான் கும்ப ராசிக்கு அதிசாரமாகச் செல்கின்றார். அவரது பார்வை 5, 7, 9 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. மேலும் தன லாபாதிபதியான குரு உங்கள் ராசிக்கே வரும் பொழுது வியாபார விருத்தி ஏற்படும். கடந்த சில நாட்களாக தொழில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அதிசார குருவின் ஆதிக்க காலத்தில் வெளிநாட்டு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.
மேஷத்தில் புதன், சுக்ரன் சஞ்சாரம்
ஏப்ரல் 10-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் செல்கின்றார். அதேபோல் ஏப்ரல் 11-ந் தேதி சுக்ரனும் அங்கு வருகிறார். இரண்டும் ஒன்று சேரும் பொழுது, ‘புத சுக்ர யோகம்’ உருவாகின்றது. சகோதர வா்க்கத்தினரால் நன்மை கிடைக்கும். பூமி வாங்கும் யோகம் உண்டு. அடகுவைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பும், அதற்கேற்ற வருமானமும் வந்து சேரும். சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். மேலதிகாரிகளைக் கொண்டு சில பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
மிதுன செவ்வாய் சஞ்சாரம்
ஏப்ரல் 13-ந் தேதி, மிதுன ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய், பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொடர்கதையான கடன்சுமை குறையும். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு பொது வாழ்வில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உன்னதமான நேரம் இது. இம்மாதம் சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 14, 15, 19, 20, 31, ஏப்ரல்: 1, 4, 5, 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ராசிநாதன் சனி, விரய ஸ்தானத்தில் தனாதிபதி குருவோடு இருப்பதால் விரயத்திற்கேற்ற பணம் வரும். ஏழரைச் சனி நடப்பதால் எதையும் யோசித்துச் செய்யுங்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். குடும்ப பிரச்சினைக்கு உடனுக்குடன் தீர்வு காணுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாகலாம்.
14.4.2021 முதல் 13.4.2022 வரை
கும்பம்
வரவை விட செலவு அதிகரிக்கும் நேரம்
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)
கும்ப ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் சனிபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், ஏழரைச் சனி தொடங்கி விட்டது. எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பச் சுமை கொஞ்சம் அதிகரிக்கும். தடைகளும், தாமதங்களும் வந்து அலைமோதும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் போன்றவை திடீரென வந்து மனக்குழப்பத்தை உருவாக்கலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ள இயலும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே குரு பகவான் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே வருமானம் திருப்தி தரும் என்றாலும், சேமிக்க இயலாத அளவிற்கு சுப விரயங்களும், வீண் விரயங்களும் வந்து கொண்டேயிருக்கும். உடல்நலத்தில் எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்பட்டு, மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு தொகையைச் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
12-ம் இடமான விரய ஸ்தானத்தில் விரயாதிபதி சனிபகவான் பலம் பெற்றிருக்கின்றார். உங்கள் சுய ஜாதக அடிப்படையில் ஏழரைச் சனி முதல் சுற்றா? நடுச்சுற்றா? மூன்றாவது சுற்றா? என்பதை அறிந்து கொண்டு செயல்படுவதே உத்தமம். சனி முதல் சுற்றாக இருக்குமேயானால் மனச்சுமை அதிகரிக்கும். மக்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்வது அரிது. விரயங்கள் கூடுதலாக இருக்கும். பணிபுரியுமிடத்தில் பலவிதமான தொல்லைகளைச் சந்திக்க நேரிடலாம். பணிநீக்கம் செய்யப்படக் கூடிய வாய்ப்புகளும் உருவாகலாம். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பதன் மூலமே உள்ளத்திலும், இல்லத்திலும் அமைதி காண இயலும். இரண்டாவது சுற்றாக சனி வருமேயானால் ஓரளவு கடுமை குறையும். மூன்றாவது சுற்றிலும் ஓரளவு கடுமை குறையும். மூன்றாவது சுற்று நடைபெறுபவர்கள் ஆரோக்கியப் பாதிப்புகளை அதிகம் சந்திக்க நேரிடும். எதிர்பாராத விரயங்களும், உறவினர் பகையும் ஏற்படும்.
மூன்றாமிடத்தில் கூட்டுக்கிரக யோகமாக நான்கு கிரகங்களின் சேர்க்கையுள்ளது. புத -ஆதித்ய யோகம், புத -சுக்ர யோகம், செவ்வாய், சுக்ரன் பரிவா்த்தனை யோகம் போன்றவை செயல்படுகின்றன. ஆனால் சுக ஸ்தானத்தில் ராகுவும், செயல் ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உண்டு. சில காரியங்களில் போராடி வெற்றிபெற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குரு பகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன லாபாதிபதி குரு, வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணப்புழக்கத்தில் தடை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்களில் சிக்கல்கள் ஏற்படும். ‘வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்தும், பணிபுரிய செல்ல இயலாத சூழ்நிலை உருவாகும்.
குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 13.4.2022-ல் மீண்டும் மீன ராசிக்கு பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 5, 7, 9 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது.
பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானம் புனிதமடைவதால், இக்காலத்தில் கொஞ்சம் நற்பலன்கள் நடைபெறும். இனம்புரியாத கவலையில் சிக்கியிருந்த உங்களுக்கு, இப்பொழுது ஏதேனும் ஒரு சில வழிகளில் நன்மைகளும் கிடைக்கும். ஜென்ம குருவாக இருப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை நிகழலாம். இருப்பினும் ஏழரைச் சனி நடைபெறுவதால், எங்கு மாறினாலும் இதே நிலைதான் ஏற்படும். எனவே வரும் மாற்றங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.
குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பெற்றோர்களின் மணிவிழாக்கள், பவள விழாக்கள் போன்றவை நடைபெறும் அமைப்பு உண்டு. இதுபோன்ற காலங்களில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களைத் தோ்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் சுபச் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3-ம் இடத்திற்கு ராகுவும், ஒன்பதாம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். 3-ல் ராகு சஞ்சரிக்கும் போது முன்னேற்றம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. என்றாலும் பாக்கிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பல நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். ‘சொத்துக்களை நீங்கள் வைத்துக்கொண்டு அதற்குரிய தொகையை எங்களுக்குத் தாருங்கள்’ என்று உடன்பிறப்புகள் உங்களிடம் கூறலாம்.
9-ம் இடமான பிதுர்ராஜ்ஜிய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கும் கேதுவால், தந்தை வழி உறவினர்களின் பகை மாறும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் விலக புதிய வழிபிறக்கும். அலுவலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ இதுவரை கடன்கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு, கால தாமதங்கள் அகன்று கைக்குப் பணம் கிடைக்கலாம். தெய்வத் திருப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இத்தனை நன்மைகள் கிடைக்குமென்றாலும் ஏழரைச் சனி நடைபெறுவதால் திசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு எதிர்பார்த்தபடி நற்பலன்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். வழிபாட்டின் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். வரவு வரும் முன்னதாகவே செலவுகள் காத்திருக்கும். பயணங்களால் பலன் கிடைப்பது அரிது. ஒரு காரியத்தை ஒரு முறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும். நாணயப் பாதிப்புகள் கூட ஏற்படலாம். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். ‘வீடு கட்டியும் வாடகைக்கு விட முடியவில்லையே’ என்று ஒருசிலா் கவலைப்படலாம். இடமாற்றம், உத்தியோக மாற்றம் கிடைக்கும். ஆனால் அந்த மாற்றங்களால் திருப்தி ஏற்படாது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் - சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். உங்கள் செயல்பாட்டில், மற்றவர்கள் குறை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக்கொள்ள இயலுமா? என்பது சந்தேகம்தான். மக்கள் செல்வங்களால் சில பிரச்சினைகள் உருவாகி மனக்கவலையைக் கொடுக்கும். குறிப்பாக விழிப்புணா்ச்சியோடு இருக்க வேண்டிய நேரம் இது.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு விரயச் சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால், கூடுதல் விரயங்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இருக்க, அனுசரிப்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் வேண்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் விரயம் ஏற்படும் என்றாலும், முடிவில் காரியம் கைகூடிவிடும். தாய் மற்றும் உடன்பிறப்புகள் ஓரளவே உதவியாக இருப்பர். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைப்பது அரிது. உடன்பணிபுரிபவரால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். அனுமன் வழிபாடு அல்லல் தீர்க்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானை வழிபடுவதோடு, அனுகூலம் தரும் நாளில் திருநள்ளாறு சென்று காக வாகனத்தானைக் கைகூப்பித் தொழுதால் கனவுகள் அனைத்தும் நனவாகும். காரிய வெற்றியும் கிடைக்கும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஏழரைச் சனிதான் தொடங்கியது! இறைவழிபாட்டால் மகிழ்ச்சி வரும்! கும்ப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 12-ம் இடத்திற்கு வருகின்றார். இப்பொழுது ஏழரைச்சனி உங்களுக்குத் தொடங்குகின்றது. ஏழரைச்சனி என்றவுடன் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே யோகத்தையும் கொடுப்பார், விரயத்தையும் கொடுப்பார். விரயத்தைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோகம்’ உருவாகின்றது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை குரு, தன-லாபாதிபதி என்பதால் எந்தச் செயலைச் செய்தாலும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு செய்ய வேண்டுமென்ற நிலை ஏற்படாது.
ஏழரைச்சனி ஆரம்பம்
மிகப்பெரிய கிரகமாகச் சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கு இப்பொழுது ஏழரைச்சனியாக வருகிறார். விரயச்சனி இப்பொழுது வந்திருக்கின்றது. இதற்குபிறகு ஜென்மச்சனி, அதன்பிறகு குடும்பச்சனி என்று வரும். பொதுவாக விரயச்சனி காலத்தில் அமைதியாகச் செயல்படுவது நல்லது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். தொழிலில் தேக்கநிலையும். தெளிவற்ற மனதுடன் செயல்படும் சூழ்நிலையும் ஏற்படும். உறவினர் களும், நண்பர்களும் செய்த உதவிக்கு நன்றி காட்ட மாட்டார்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்படும். நினைக்க இயலாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 6, 9 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், எதிர்ப்பு, வியாதி, கடன், தந்தை வழி உறவு, பாக்கியம், பாகப்பிரிவினை போன்றவற்றைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால் அங்கெல்லாம் புதிய திருப்பங்களும், மாற்றங்களும் வரப்போகின்றது. 2-ம் இடத்தில் சனி பார்வை பதிவதால் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடினாலும் அதைச் சமாளிப்பீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோகத்தில் மாற்றம் உண்டு. தொழிலைப் பொறுத்த வரை புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். எதிரிகள் விலகுவர். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பெற்றோர் வழியில் பிணக்குகள் ஏற்பட்டு பிறகு இணக்கம் வரும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வாய்ப்பு உண்டு. கைக்கு கிடைத்த பூர்வீக சொத்தை விற்றுவிட்டு புதிய இடம் வாங்கி மனை கட்ட வேண்டுமென்ற ஆர்வம் கைகூடும். தேவைகள் பூர்த்தியானாலும் கூட சில சமயத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் சனி உங்கள் ராசிக்கும் அதிபதி என்பதால் அதை வழிபடுவதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செய்திகள் அதிகம் வந்து சேரும். தங்களுக்கோ, தங்கள் சகோதரர்களுக்கோ, தங்களின் பிள்ளைக ளுக்கோ கல்யாணம் போன்ற சுபகாரியங்கள், பெற்றோர்களின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டு ஒப்பந்தங்களும் வரலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடும், உங்களின் மதிநுட்பத்தாலும் மகத்தான பலன்களை வரழைத்துக் கொள்ளும் நேரம் இது.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மனதில் நினைத்ததை மறு கணமே செய்யும் யோகம் உண்டு. நடக்கும் தொழிலைக் கொடுத்துவிட்டு வேறு தொழிலை செய்ய நண்பர்களின் ஆதரவைக் கேட்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு, ‘வெளிநாடு செல்ல முடியவில்லையே’ என்ற ஆதங்கம் தீரும். திடீரென நிர்வாகம் உங்களை வெளி நாட்டிற்கு அனுப்ப பரிசீலனை செய்வர். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மனக்குழப்பம் அகல அனுபவஸ்தர்கள் ஆலோசனை சொல்வர். பொது நலத் தில் இருப்பவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதர சச்சரவுகள் அகலும். பத்திரப் பதிவிலிருந்த தடைகள் விலகும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழி காட்டுவர். இக்காலத்தில் சனி பகவானும் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். ஜென்ம சனியாவதால் உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. முன்கோபத்தின் காரணமாகச் சில பாதிப்புகளும், முன்னேற்றத்தில் குறுக்கீடும் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களும் விலகிக்கொள்வதாக பயமுறுத்துவர். எதிரிகளின் பலம் கொஞ்சம் அதிகரிக்கும் நேரமிது.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடக்கிறது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே தன லாபாதிபதி உலா வருவதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, வாக்கு ஸ்தானம் பலப் படுகின்றது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கேதுவின் ஆதிக்கத்தால், தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். பழைய வாகனத்தை பைசல் செய்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆலயத் திருப்பணிகளிலும் கவனம் செலுத்துவீர்கள்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை அமையும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் கோளாறுகள் உருவாகும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்லியதன் மூலம் சிக்கல்கள் உருவாகலாம்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானையும், சிவனையும், உமையவளையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் நந்தீஸ்வரர் படம் வைத்து அதற்குரிய பதிகங்கள் பாடி வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார்.
இதன் விளைவாக விரயங்கள் அதிகரிக்கும். வீண் பழிகள் வந்து சேரும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் தடை ஏற்படும். ஆரோக்கியப் பாதிப்புகள் உருவாகும். குடும்பப் பெரியவர்களையும், அனுபவஸ்தர்களையும் கலந்து ஆலோசித்து செய்வதன் மூலம் எதிலும் வெற்றி காண இயலும். தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏழரைச்சனியாக தொடங்குகின்றது. எனவே எப்பொழுதும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. ஆதாயத்தைக் காட்டிலும் விரயம் கூடும். கணவன் - மனைவி ஒற்றுமை திருப்தி தரும். விலகிய சகோதரர்கள் விரும்பி வந்து சேருவர். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவற்றில் செய்த ஏற்பாடு பலன் தரும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத மாற்றம் வந்து சேரும். உத்தியோகத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கும் சூழ்நிலை உண்டு. பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்தால் பிரச்சினைகள் ஏற்படும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
நான்கில் வருகிறது ராகு..வாழ்வில் வசந்தம் வரும்..
கும்ப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், இப்பொழுது உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு வரப்போகின்றார். அதே போல கேது பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலிருந்து தொழில் ஸ்தானமான 10-ம் இடத்திற்கு அதே நாளில் வரப்போகின்றார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மகர ராசிக்கு குரு பகவான் செல்கின்றார். அங்கு அவர் நீச்சம்பெறுகின்றார். டிசம்பர் 26-ந் தேதி சனி பகவான் பெயர்ச்சியாகி மகரத்திற்குச் செல்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி உங்களுக்குத் தொடங்குகின்றது. முதல் சுற்று நடப்பவர்களாக இருந்தாலும், மூன்றாவது சுற்று நடப்பவர்களாக இருந்தாலும் மிக மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி, குரு பகவான் உங்கள் ராசிக்கு வருகிறார். அங்கிருந்து கொண்டு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார்.
சுக ஸ்தானத்தில் ராகு! தொழில் ஸ்தானத்தில் கேது!
ராகு இப்பொழுது சஞ்சரிக்கப் போவது 4-ம் இடமாகும். இதை ‘அர்த்தாஷ்டம ராகு’ என்று சொல் வது வழக்கம். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆரோக்கியத் தொல்லைகள் அடிக்கடி தலைதூக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். சிறு தொல்லைகள் உடலில் தோன்றினாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை அமையும்.
தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கூட்டாளிகள் உங் களுக்கு இணக்கமாக நடந்துகொள்வார்களா என்பது சந்தேகம் தான். கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமான கணக்கு வழக்குகளை கச்சிதமாக வைத்துக்கொள்வது நல்லது. பணியாளர் தொல்லை அதிகரிக்கும். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்பொழுது உங்களுடைய மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவும். தொழிலை விரிவுசெய்ய கடன் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும்பொழுது, சகோதரர்களால் சில நன்மைகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடி யும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முன்னேற்றப் பாதை யில் செல்ல முடிவெடுப்பீர்கள். வங்கிகளில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ‘நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்றும், இன்னும் வேலைக்கு வரச்சொல்லி அழைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குவீர்கள். சொத்து விற்பனையின் மூலம் வரும் தனலாபத்தை ஒரு சிலர் தொழிலுக்கு உபயோகப்படுத்திக் கொள்வர்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
சந்திரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு மாற்றங்கள் உருவாகும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் ‘செய்யலாமா வேண்டாமா?’ என்ற இரட்டித்த சிந்தனை மேலோங்கும். வியாபார நுணுக்கங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. பொதுவாக எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது. உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் வரலாம். நீண்ட நாட்களாக நட்பாக இருந்தவர்கள் வாக்குவாதங்கள் செய்ததன் விளைவாகப் பகையாகலாம். விலை உயர்ந்தப் பொருட்கள் அல்லது நிலபுலன்களை ஒருசிலர் விற்க நேரிடும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இக்காலத்தில் யாருடைய பணமாவது உங்கள் கைகளில் புரளும்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கொடுக்கல்-வாங்கல்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவால் அலுவலகப் பணிகள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் குறைகள் தீர வழிவகுப்பீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீடுகட்ட அல்லது வாகனங்கள் வாங்க எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் ‘நிழல்கிரகம்’ என்று வர்ணிக்கப்பட்டாலும், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்நிற்பவர் ஆவார். பாதசார அடிப்படையில் பலன்களை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பகை கிரகத்தின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதற்குரிய பரிகாரங் களையும், வழிபாடுகளையும் செய்து கொண்டால் நற்பலன் கிடைக்கும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது வரவும், செலவும் சமமாக இருக்கும். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். எனவே பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி சில முக்கிய முடிவெடுப்பீர்கள். அவர்களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, பணியில் சேர்வது சம்பந்தமாகவோ நீங்கள் செய்யும் முயற்சி பலன்தரும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரப் பணி அமையும். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேலையை முடிக்க ஒன்று இரண்டு முறை அலைய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே இக்காலத்தில் குடும்பத்தில் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். முயற்சிக்குரிய பலன் முழுமையாகக் கிடைக்கும். அரைகுறையாக நின்ற பணிகள் விரைவில் முடிவடையும். இழப்புகளைத் தவிர்க்க எச்சரிக்கையோடு செயல்படுவீர்கள். ஒதுங்கி நின்ற ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். உயர்அதிகாரிகளுடன் ஏற்பட்ட உட்பூசல் மாறும். உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவராதவர்களை விட்டு விலகுவீர்கள். வீடுமாற்றங்கள், இடமாற்றங்கள் விருப்பம்போல் அமையும். அதிரடியாக முடிவெடுத்து அருகில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு, உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். தன லாபாதிபதியான குருவின் சாரத்தில், தொழில் ஸ்தானத்தில் வீற்றிருக்கும் கேது உலா வரும்பொழுது தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி காண்பீர்கள். வி.ஐ.பி.க்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
நான்காமிடத்து ராகுவால் நன்மைகள் கிடைக்கவும், 10-ம் இடத்து கேதுவால் தொழில் முன்னேற்றம் காணவும், சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அனுமன் கவசம் பாடி வழிபடுங்கள். நிலைமை சீரான பிறகு, வாலில் மணிகட்டிய ஜெய ஆஞ்சநேயர் அருள் வழங்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.
பெண்களுக்கு...
ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். அர்த்தாஷ்டம ராகுவால் விரயங்கள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஏழரைச்சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் தடைகளும், தாமதங்களும் வரலாம். உறவினர்களையும், உடன்பிறப்புகளையும் அனுசரித்துக் கொள்வது நல்லது. மூட்டுவலி, முழங்கால் வலி போன்றவை வந்து போகும். இல்லத்து பூஜையறையில் வராகி அம்மன் பாமாலை பாடி வழிபடுவது நல்லது.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
பனிரெண்டாமிடத்தில் குரு பகவான், பண விரயங்கள் அதிகரிக்கும்!
கும்ப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 12-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 12-ம் இடம் என்பது அயன சயன ஸ்தானமாகும். அதுமட்டுமல்லாமல் பயணங்களையும், விரயங்களையும் குறிக்கும் இடமாகும். அந்த இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். குடும்பச்சுமை கொஞ்சம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. தொழில் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க இயலாத நிலை உருவாகலாம். உத்தியோகத்தில் திடீரென ஊர் மாற்றம் வந்து மனதை வாட வைக்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்ப முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம். பொறுமையும், நிதானமும் தேவைப்படும் நேரமிது. சுய ஜாதகம் பலம்பெற்று இருப்பவர்கள் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக்கொள்ள இயலும். இடையில் சில மாதங்கள் உங்கள் ராசிக்குள் குரு வருகின்றார். வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். தொடர்ந்து குரு வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ளலாம்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டிச் சென்று பணிபுரிய வேண்டுமென்று விரும்பியவர்களுக்கு, அது கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், வீடு வாங்குவது அல்லது விற்பது, பழைய வாகனத்தைக்கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குவது சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சியும் கைகூடும்.
குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் ஜீவன ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். சிறு தொல்லைகள் வந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. உத்தியோகத்தில் பணிநிரந்தரம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது பணிநிரந்தரம் ஆகலாம். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வாங்கிய கடனில் ஓரளவேனும் கொடுக்கக்கூடிய விதத்தில் பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத் துணையின் மூலம் வருமானம் வரலாம்.
குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் ஆயுள் ஸ்தானம் பலப்படுகின்றது. ஆரோக்கியத் தொல்லை அகலும். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட குறுக்கீடு சக்திகள் அகலும். குடும்பத்தில் சுபச்சடங்குகள், கல்யாணம் போன்ற காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வீர்கள். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கலாம்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு சூரியன் சப்தமாதிபதி ஆவார். அதாவது களத்திர ஸ்தானதிபதி. அவரது சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். சுபச்செய்திகள் வந்த வண்ணமாகவே இருக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகிவிடும். கொடுக்கல் - வாங்கல்களில் பெரிய தொகை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு வேலை சம்பந்தமாக முயற்சி செய்திருந்தால் அது கைகூடும். தொழில் போட்டிகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம்(5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு ஆறாமிடத்திற்கு அதிபதியானவர், சந்திரன். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்குமிடத்திற்கு அதிபதியாவார். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ள வேண்டாம். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். வீண் விரோதங்களை வளர்த்துக்கொள்வதன் மூலமும், மற்றவர்களை விமர்சிப்பதன் மூலமும் பிரச்சினைகள் அதிகரிக்கும். எதையும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிகாண வேண்டிய நேரமிது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். எனவே உங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் கூட தாமதப்படலாம். இக்காலத்தில் நேர்மறை எண்ணங்களையே சிந்திப்பது நல்லது.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வழிகாட்டும் அனுபவஸ்தர்கள் வாயிலாக வாழ்க்கைத் தேவகைளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள். முன்கோபத்தின் காரணமாக சில முன்னேற்றப் பாதிப்புகள் வந்தாலும் கூட சமாளித்து விடுவீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரப் போட்டிகள் அதிகரித்தாலும் கூட அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். ‘கட்டிய வீட்டைப் பழுதுபார்க்க அல்லது விரிவு செய்ய கையில் பணம் இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, வரவேண்டிய இடத்திலிருந்து பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ‘வி.ஆர்.எஸ் பெற்றுக் கொள்ளலாமா?’ என்று சிந்திப்பர்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில்செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியான உங்கள் ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். ஜென்ம குருவாக இருந்தாலும் நன்மைகள் அதிகம் செய்யும். தனலாபாதிபதியான குரு ராசியில் உலா வரும்பொழுது, வருமானம் போதுமானதாக இருக்கும். தெய்வீகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் உடல்நலம் சீராகும். பிள்ளைகளின் வாழ்க்கை சீராக வழிகாட்டுவீர்கள். பெற்றோர்களின் பிறந்தநாள் விழாக்கள், பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், உடன்பிறப்புகளின் திருமணம், கட்டிடம் கட்டும் முயற்சி, கடைதிறப்பு விழாக்கள் போன்ற நல்ல காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் அவற்றை முறியடித்து வெற்றிகாண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பயணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். மகரம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. பணத்தட்டுப்பாடுகள் அதிகரிக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஸ்தம்பித்து நிற்கும். ‘வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் ‘சொந்த ஊர் திரும்ப முடியவில்லையே’ என்று கவலைப்படுவர். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். விரயங்கள் கூடுதலாக இருக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் இருந்தும் அதை உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்துப் பூஜை அறையில் சனிக்கிழமை தோறும் அனுமன் கவசம் பாடி வழிபடுவது நல்லது. பவுர்ணமி விரதமிருந்து மால்மருகனை வழிபடுவதன் மூலம் மகத்தான பலன்களைப் பெறலாம். குலதெய்வ வழிபாடு, குரு வழிபாடு நன்மை தரும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு, குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் விரயங்களே கூடுதலாக இருக்கும். உடல்நலனில் அதிக கவனம் தேவை. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் ஓரளவேனும் நன்மை கிட்டும். உங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றிதரும். உங்களின் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். இடமாற்றம், உத்தியோக மாற்றங்கள் கூட எதிர்பாராத விதத்தில் வரலாம்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
4/11/2021 10:01:22 AM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Aquarius