சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
9.4.2021 முதல் 15.4.2021 வரை
உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, வெளியூர் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கை யாளர் சேர்க்கை உண்டு. குடும்பம் சீராக நடை பெறும். கணவன் - மனைவி இடையே கருத்துவேறுபாடு மறையும். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள். பெண்களின் உடல்நலனில் அக்கறை தேவை. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபடலாம்.
பங்குனி மாத ராசிபலன்கள் 14.3.2021 முதல் 13.4.2021 வரை
கடக ராசி அன்பர்களே!
சார்வரி வருடம் பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் கண்டகச் சனி நடைபெறுகிறது. எனவே விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய மாதம் இது. குருவின் பார்வை ராசியில் பதிவதால் இடையிடையே நற்பலன்களும் வந்து சேரும். இம்மாதம் கும்பத்தில், குரு வரும்பொழுது அஷ்டமத்து குருவாக அமைவதால், விரயங்கள் கூடும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மார்ச் 18-ந் தேதி, உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு சுக்ரன் வருகின்றார். மீனத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் அங்கு உச்சம் பெறுவதால் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக ஸ்தானம், லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன் உச்சம்பெறும் பொழுது பணப்பற்றாக்குறை அகலும். பல நாட்களாக நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும்.
மீன புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி, மீன ராசிக்கு புதன் செல்கின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். விரயாதிபதி நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். விரயத்திற்கேற்ற பணம் வந்துகொண்டேயிருக்கும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த தடை அகலும். வழக்குகள் சாதகமாகும்.
கும்ப குருவின் சஞ்சாரம்
ஏப்ரல் 5-ந் தேதி குரு பகவான், கும்ப ராசிக்கு அதிசாரமாகச் செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களை பார்க்கின்றார். எனவே குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். தாயின் உடல்நலம் சீராகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். அஷ்டமத்தில் குரு சஞ்சரிப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.
மேஷத்தில் புதன், சுக்ரன் சஞ்சாரம்
ஏப்ரல் 10-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் செல்கின்றார். அதேபோல் ஏப்ரல் 11-ந் தேதி மேஷ ராசிக்கு சுக்ரன் வருகிறார். இரண்டும் ஒன்று சேரும் பொழுது ‘புத சுக்ர யோகம்’ உருவாகின்றது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகள் விலகுவர். தடைபட்டு வந்த காரியங்கள், துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் கருதி வங்கியில் விண்ணப்பித்திருந்தால், அது கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டு வேலை இழந்தவர்களுக்கு, மீண்டும் வேலை கிடைக்கும்.
மிதுன செவ்வாய் சஞ்சாரம்
ஏப்ரல் 13-ந் தேதி மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். இம்மாதம் பவுர்ணமிஅன்று விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 14, 15, 20, 21, 26, 27, 31, ஏப்ரல்: 1, 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் குடும்பச் சுமை கூடும். ஓய்வில்லாமல் உழைத்தாலும், உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. பணத்தேவை கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். கணவன் - மனைவிக்குள் அமைதி நிலவும். உடன்பிறப்புகள் மற்றும் தாயின் ஆதரவு ஓரளவு உண்டு. கண்டகச் சனி நடப்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைப்பது அரிது. அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.
14.4.2021 முதல் 13.4.2022 வரை
கடகம்
நட்பால் நன்மைகள் கிடைக்கும்
(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)
கடக ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தோடும், கண்டகச் சனியின் சஞ்சாரத்தோடும் பிறக்கின்றது. எனவே விரயங்களையும், விருப்பதிற்கு எதிரான சூழ்நிலையையும் சந்திக்கக்கூடிய ஆண்டாகவே இந்தப் புத்தாண்டு அமைகின்றது. இருப்பினும் தொழில் ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டு கூட்டுக்கிரக யோகம் உருவாகின்றது. அத்தோடு புத -சுக்ர யோகமும், புத - ஆதித்ய யோகமும் இருப்பதால், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். தெய்வ வழிபாடுகளும், முன்னோர் வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், தொழில் ஸ்தானத்தில் தனாதிபதி சூரியனோடும், சகாய -விரய ஸ்தானாதிபதி புதனோடும் இணைந்திருக்கின்றார். யோகம் தரும் செவ்வாய், லாப ஸ்தானத்தில் ராகுவோடு கூடியிருக்கின்றார். எனவே துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்களைக் காட்டிலும் நண்பர்களின் ஆதரவோடு நல்ல காரியங்கள் பலவற்றையும் செய்து முடிப்பீர்கள். சுக்ரனும், செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் பெற்று ஆண்டு தொடங்குவதால், ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டு. பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் மன அமைதி குறைவாகவே இருக்கும்.
புத - ஆதித்ய யோகம் இருப்பதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடலாம். பிள்ளைகளின் பட்ட மேற்படிப்பு சம்பந்தமாக, ஏதேனும் முயற்சிகள் செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும் ஆண்டு இது. பிள்ளைகளின் மணவிழா, பெற்றோர்களின் மணிவிழா, முத்து விழா, பவளவிழா மற்றும் புதுமனை புகுவிழா போன்ற விழாக்களை நடத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் அவர், வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். இதன் விளைவாக கடன்சுமை குறையும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு, புதிய பொறுப்புகள் வரலாம். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். குரு 9-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குவதால், தந்தை வழியில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.
குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குரு பகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 4, 12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. எனவே அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் வாயிலாக உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது.
அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 2-ம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். எனவே குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது நடைபெறும். கல்வித் தடை அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிய வேண்டுமென்று விரும்பியவர்களுக்கு அது கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். இடம், வீடு வாங்குவது சம்பந்தமாக அல்லது விற்பது சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சி கைகூடும்.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். குறிப்பாக வீட்டிற்குத் தேவையான விலைஉயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்யாண காரியங்களை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் திடீரென மாற்றங்கள் வரலாம். வரும் மாற்றங்கள் எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதே சிறந்தது. மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்க்க முன்வரவில்லை என்பதனால், வேறு வேலைக்கு முயற்சி செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.
மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. இதன் விளைவாக இதுவரை இருந்து வந்த ஆரோக்கியத் தொல்லை அகலும். ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்ன மருத்துவர்கள், இனி சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கிவிடலாம் என்று ஆணித்தரமாகச் சொல்வர். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் இனி வந்து கொண்டேயிருக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதியும், வீட்டை விரிவு செய்து கட்டும் முயற்சியிலும் உங்களுடைய எண்ணங்கள் செல்லலாம்.
ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 4-ம் இடத்தில் கேதுவும், 10-ம் இடத்தில் ராகுவும் வரப்போகின்றார்கள். 10-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, ‘சுயதொழில் செய்தால் என்ன?’ என்ற சிந்தனை உருவாகும். தொழில் செய்ய முன்வரும்பொழுது கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். அரசு வழியில் கூட எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே வாழ்க்கைத் துணையோடு பிரச்சினைகள் வரலாம். உங்களுக்கு வாய்த்த தொழில் பங்குதாரர்கள் உங்களை விட்டு விலகலாம். எதிர்பாராத இழப்புகள், விரயங்கள் உண்டு. எதையும் எளிதில் நம்பும் உங்களுக்கு, சனி பகவான் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிமாற்றம் அல்லது பணிநீக்கம் செய்யப்படலாம்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2022 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் - சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் மிகவும் விழிப்புணர்ச்சி தேவை. என்னதான் நீங்கள் முறையாகச் செயல்பட்டாலும், எதிரிகள் உங்கள் செயல்பாடுகளில் குறையையே காண்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனக்கலக்கம் ஏற்படும் நேரம் இது.
பெண்களுக்கான பலன்கள்
கொஞ்சம் விழிப்புணா்ச்சியோடு செயல்பட வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. கண்டகச் சனியின் ஆதிக்கத்தால் கடமையில் தொய்வு ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் அடிக்கடி ஏற்படலாம். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஆகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். செவ்வாய் - சனி பார்வை காலத்தில் மிகுந்த கவனம் தேவை. அனுமன் வழிபாடு அல்லல் தீர்க்கும்.
வளா்ச்சி தரும் வழிபாடு
பவுர்ணமி தோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபாடு செய்து வாருங்கள். மேலும் உங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் அபிராமி அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்க்கை வசந்தமாக மாறும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
கண்டகச் சனியின் ஆதிக்கம், கடமையில் கவனம் இனி தேவை! கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். இதைக் ‘கண்டகச் சனி’ என்று சொல்வது வழக்கம். இப்போது சனியின் நேரடிப்பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது.
‘கண்டகச் சனி’ என்றதும், ‘ஏதேனும் ‘கண்டம்’ வந்து விடுமோ’ என்று நினைக்க வேண்டாம். சனி மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கூடும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதற்கேற்ப சனியின் கடுமையைக் குறைக்கும். இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது.
ஏழாமிடத்தில் சனி
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக, உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 1, 4, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், முன்னேற்றம், உற்சாகம், சுகஜீவனம், வாகனம், தாய்வழி உறவு, பூர்வீகம், பாக்கியம் ஆகிய அனைத்து ஆதிபத்யங்களிலும் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். சனியின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் கல்வியில் கரையேற கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த இலக்கை அடைவது கடினம் என்றாலும், குரு பார்வை இருப்பதால் மகர குருவின் சஞ்சார காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தனவரவு தாராளமாக வந்து சேரும். தனாதிபதியாகவும், குடும்ப ஸ்தானாதிபதியாகவும் சூரியன் விளங்குவதால், மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்பு கிட்டும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதனாக சந்திரன் இருப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். மின்னணுத் துறையிலும், கலைத்துறையிலும் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வில் வெளிவரும் சூழ்நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வீடு, இடம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் ஆர்வம் கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். இந்த நேரத்தில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கப் போகின்றார். அப்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஏற்பட்டாலும், கும்ப ராசி சனிக்கு சொந்த வீடு என்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். சொந்தங்களின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு வருவதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மிகச்சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொழில் தொடங்க வாய்ப்புகள் கைகூடி வரும். 4-ல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி தொல்லைகள் உண்டு. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். வாகனங்கள் வாங்கிப் பயணம் செய்யும் முயற்சி கைகூடும். கேதுவின் ஆதிக்கத்தால் சகோதர வர்க்கத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். அவர்கள் மூலம் வாங்கிய தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
புதன்கிழமை தோறும் விரதமிருந்து ராமபிரான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராமர் பட்டாபிஷேக படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து ராமர், சீதா, அனுமன் ஆகியோருக்குரிய பாடல்களைப் பாடி வழிபடுவது நல்லது. ராமபிரான் வழிபாடு நம்பிக்கையை நிறைவேற்றி வைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி சனி என்பதால், குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் சிக்கலை உருவாக்கும். சனி அஷ்டமாதிபதியாகி வக்ரம் பெறுவதால் ஒருசில காரியங்கள் திடீரென முடிவாகும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம், பெற்றோர்களின் மணிவிழாக்கள் நடைபெற்றுச் சுபவிரயங்களை உருவாக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய பெயர்ச்சியாக அமையும். அதிக விரயங்கள் ஏற்படும். உறவினர் பகை ஏற்பட்டு உள்ளத்தில் தெளிவில்லாமல் செயல்பட வைக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்காமல் இருக்க, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. உடன்பிறப்புகளின் குணமறிந்து செயல்படுவதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு திடீர் இடமாற்றங்கள் வரலாம். வேலையில் பிரச்சினைகளும் உண்டு. நிதானத்துடன் செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
பதினொன்றில் வருகிறது ராகு..பணவரவு திருப்தி தரும்..
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், செப்டம்பர் 1-ந் தேதி அன்று லாப ஸ்தானம் எனப்படும் 11-ம் இடத்திற்குச் செல்கின்றார். அது போல கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதே நாளில் வரப்போகின்றார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். அப்பொழுது அவர் உங்கள் ராசி யையும் 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின் றார். அதன்பிறகு டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு சனி செல்கின்றார். அப்பொழுது கண்டகச் சனியின் ஆதிக்கம் நடைபெறும். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி குரு, கும்ப ராசிக்குச் செல்கின்றார். அப்பொழுது உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங் களைப் பார்வையிடுகின்றார். இவற்றை அடிப்படையாக வைத்து ராகு-கேது பலன்களைப் பார்ப்போம்.
வருமானத்தைப் பெருக்கும் ராகு
பிள்ளைகளால் பெருமை தரும் கேது
பதினோராமிடமான லாப ஸ்தானத்திற்கு வரும் ராகு, உங்களின் சோகத்தை மாற்றி சுகத்தைக் கொடுப்பார். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். நஷ்டத்தில் நடந்த தொழில் இனி லாபத்தில் நடக்கும். வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிக்கு வங்கிகளின் கடனுதவி கிடைக்கலாம். முன்னோர் வழிச்சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும், வேலையில் இருப்பவர்களுக்குச் சுயதொழில் செய்யும் வாய்ப்பும் உருவாகலாம்.
பஞ்சம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்து பற்றிய பிரச்சினை முடிவிற்கு வரும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்குவர். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதியும், கல்யாண முயற்சி கருதியும் நீங்கள் எடுத்த முடிவு பலன்தரும். ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கும், தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாத வேலை அமையும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, எண்ணங்கள் எளிதில் நிறைவேற வழிபிறக்கும். குடும்பத்தில் அமைதி நில வும். உத்தியோகம் மற்றும் தொழிலில் உன்னத நிலை காணும் சூழ்நிலை உருவாகும். பூமிப் பிரச்சினை அகலும். புதிய சொத்துக்கள் வாங்குவது, வாங்கிய சொத்தை விற்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடிய வழிபிறக்கும். அரசு வழி உத்தியோகத்திற்கு ஏற்பாடு செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். சாதாரண வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வோடு கூடிய வேலை அமையலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், உயர்பதவிகளும் கிடைக்கும்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
உங்கள் ராசிநாதன் சந்திரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். அதே நேரம் பணப்புழக்கத்திற்கு குறைவு ஏற்படாது. வேகமாகத் தொடங்கிய வேலையைப் பாதியிலேயே விட்டுவிடுவீர்கள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் இப்பொழுது உங்களுக்கு அதிகம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதப்படலாம். அதிகார வர்க்கத்தினரின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியச் சீர்கேடுகள் ஏற்படலாம், கவனம் தேவை.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, நற்பலன்கள் ஏராளமாக நடைபெறும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்பு உண்டு. உங்களால் பலன்அடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். ஆபரணங்கள் வாங்க சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பாராத நல்ல தகவலும் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
பாத சார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, அங்குள்ள கிரகங்களின் பாதசார அடிப்படையில் பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். அவற் றின் பலாபலன்களை பாதசார அடிப்படையில் நாம் அறிந்து செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது வரவும், செலவும் சமமாகவே இருக்கும். புதன், உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். சகோதர, சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். எனவே அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது இக்காலத்தில் உடன்பிறப்புகளால் ஒருசில நன்மை கிடைக்கும். அவர்களின் இல்லத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் சீராகும். இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள். வெளிநாட்டு முயற்சியில் எதிர்பார்த்த பலன் உண்டு. வாங்கிய கடனில் ஒரு பகுதியைக் கொடுத்து மகிழ்வீர்கள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 7,8 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவருடைய சாரத்தில் கேது வரும்பொழுது இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் எளிதில் வரலாம். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் கூட ஏற்படலாம். எந்த மாற்றங்கள்வந்தாலும் வந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் நிர்ப்பந்தம் ஏற்படும். மூன்றாம் நபரின் தலையீட்டால் குடும்பப் பிரச்சினைகள் கொடிகட்டிப் பறக்கும். இக்காலத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கூட குடும்ப விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. துன்பங்களை விலைகொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும். கடின உழைப்பும், கவலையும் அதிகரிக்கும் நேரமிது.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குருபகவான், உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே இக்காலத்தில் ஓரளவு நற்பலன்களே நடைபெறும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்பட்டு தனித்து இயங்கும் சூழல் உண்டு. உத்தியோகத்தில் கூட விருப்ப ஓய்வில் வெளிவந்து நண்பர்களைக் கூட்டாக்கி தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். எது, எப்படி இருந்தாலும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகியது என்று சொல்வீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
லாப ஸ்தான ராகுவால் வருமானம் திருப்தியாக அமையவும், பஞ்சம ஸ்தான கேதுவால் பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் கிடைக்கவும், இல்லத்து பூஜையறையில் சனிக்கிழமை தோறும், சனி கவசம் பாடி வழிபடுவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது ஜெய ஆஞ்சநேயரை வழிபடலாம்.
பெண்களுக்கு...
ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வாழ்க்கை அமையும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்புகள் கைகூடி வரும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். கடன் சுமை குறையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். நேர்மறைச் சிந்தனைகளை மேற்கொள்வது நல்லது. செவ்வாய் விரதமும், அம்பிகை வழிபாடும் நன்மை தரும்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
ஏழாமிடத்தில் குரு பகவான், இல்லற வாழ்க்கை இனி அமையும்!
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 7-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கு ஓராண்டு காலம் வீற்றிருந்து பார்வை பலனால், உங்கள் விருப்பங்கள் நிறைவேற உறுதுணையாக இருப்பார். இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு, நீச்சம் பெற்றாலும் கூட நேரடியாக அவர் பார்வை உங்கள் ராசியின் மீது பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். எதை எப்படிச் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அப்படியே செய்து முடிப்பீர்கள். இடையில் சில மாதத்திற்கு எட்டாமிடத்திற்கும் குரு செல்கின்றார். குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு, நினைத்ததெல்லாம் நிறைவேறும். அஷ்டம குருவின் ஆதிக்க காலத்தில் தடைகளும், தாமதங்களும் வருமேயானால் வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குருவை வழிபடுவதன் மூலம் நன்மைகளைப் பெறமுடியும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கின்றார். பிறகு 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கப்போகின்றார். உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உறவினர்களின் ஒத்துழைப்பும் திருப்திகரமாக இருக்கும். வீடு தேடி வந்த வீண் பிரச்சினைகள் அகலும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரமிது. திடீரென அறிமுகமாகும் ஒருவரால் உங்களுக்கு நற்பலன்கள் வந்து சேரப்போகின்றது.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல வாய்ப்புகள் கைகூடிவரும். குரு பார்வையால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. உத்தியோகம் தொடர்பான நேர்முகத் தேர்வில் இப்பொழுது வெற்றி கிடைக்கும். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு அரசியல் களத்தில் குதிப்பீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் திடீரென வரலாம்.
ஒருசிலருக்கு உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் கடன்சுமை குறைய உதவிபுரிவர். குருவின் பார்வை 11-ம் இடம் எனப்படும் லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து கூட அழைப்புகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்துவருவர். பணியாளர்களின் தொல்லை அகலும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழில் இனி சொந்தக் கட்டிடத்திற்கு மாறும் அமைப்பு கைகூடும். தெளிந்த மனதுடன் செயல்படுவீர்கள். கவுரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். மூத்த சகோதரத்துடன் இருந்த மோதல்கள் விலகும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதி சூரியன் ஆவார். எனவே தனாதிபதி சூரியன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது தனவரவு திருப்திகரமாக இருக்கும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். இதுவரை சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை இனிக் குறையும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ சுப காரியம் நடைபெறுவதில் தடை இருந்தால், அந்தத் தடைகள் இனி தானாக விலகும். பிரபலங்களின் நட்பால் பெருமை காண்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன் உங்கள் ராசிநாதன் ஆவார். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘குருசந்திர யோக’ அடிப்படையில் மிகுந்த நன்மைகளைச் செய்வார். குறிப்பாக தொழில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். பெற்றோர்களும், உற்றார், உறவினர்களும் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். வியாபாரம் வெற்றிநடை போடும். வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை தடையாக இருந்த பயணம் தானாக நடைபெறும். ‘நூதன வாகனங்கள் வாங்கிப் பயணிக்க வேண்டும்’ என்று விரும்புபவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. விவசாயம், பண்ணை வீடுகள் அமைக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்வோர் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் ஈட்டுவர்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான் சஞ்சாரம் மிகச்சிறப்பாக இருக்கின்றது. செவ்வாய் உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமாகும். பாக்கிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் சாரத்தில் குரு பகவான் உலாவரும் பொழுது, நீங்கள் நினைக்க இயலாத யோகம் வந்துசேரப்போகின்றது. வியாபாரம் சூடுபிடிக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் தானாகவே வந்து சேரலாம். ஒருசிலருக்கு தலைமைப் பொறுப்புகளும் எதிர்பாராத வகையில் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவர். நீங்கள் கேட்ட சலுகைகளையும் உடனுக்குடன் வழங்குவர். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதியும், எதிர்கால நலன்கருதியும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கைவிட்டுப்போன சொத்துக்களை மீண்டும் கைப்பற்றுவீர்கள். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொழிலில் இருந்த குறுக்கீடு சக்திகள் அகலும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் குரு, கும்ப ராசியில் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. ஆயினும் அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைத்திருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். வீண் விரயங்கள் உண்டு. எதிர்ப்புகளும் வீடு தேடி வரும். இல்லத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கலாம். இருப்பினும் குரு பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு செல்லும் முயற்சியை தள்ளி வைப்பது நல்லது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும். குடும்பச்சுமை அதிகரிக்கும். வாங்கிய கடனைக் கொடுக்க ஏதேனும் சொத்துக்களை விற்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் வரலாம். வரும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்திலேயே அமையும். மறைமுகப் பகை அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள், பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படும் சூழ்நிலை கூட உண்டு. எனவே கூட்டாளிகளை அனுசரித்துக் கொள்வதோடு மேலிடத்தில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் குரு தட்சிணாமூர்த்தியின் படம் வைத்து குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது. மேலும் சதுர்த்தியன்று விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சகல யோகங்களும் வந்து சேரும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு, குரு பார்வை இருப்பதால் முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். உடல்நலம் சீராகும். உன்னத வாழ்விற்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுக்கும். புகுந்த வீட்டிற்குப் பெருமை சேர்ப்பீர்கள். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவு திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவர்களது திறமையைப் பார்த்து ஊதிய உயர்வு கொடுக்க மேலதிகாரிகள் முன்வருவர். வீடு கட்ட எடுத்த முயற்சிக்கும் உதவிகள் கிடைக்கும். பவுர்ணமி வழிபாடு பலன்தரும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
4/11/2021 6:40:55 AM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Cancer