உத்தியோக முயற்சியில் பலன் கிட்டும் நாள். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர்.
16.4.2021 முதல் 22.4.2021 வரை
எதிர்பாராத பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, முயற்சியின் பேரில் பணவரவு வரலாம். தொழில் செய்பவர்கள், கைகளில் உள்ள பணிகளை, உரிய நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். குடும்பத்தில் புதிய பொருட்கள் சேரும். பணிபுரியும் பெண் களால் குடும்ப நிதியில் பற்றாக்குறை அகலும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.
சித்திரை மாத ராசி பலன்கள் 14.4.2021 முதல் 14.5.2021 வரை
மிதுன ராசி நேயர்களே!
பிலவ வருடம் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், விரயாதிபதி சுக்ரனோடும், சகாய ஸ்தானாதிபதி சூரியனோடும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நல்ல மாற்றம் இல்லம் தேடி வரலாம்.
கூட்டுக்கிரக யோகம்
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் இணைந்து சஞ்சரிக்கின்றன. இதனால் ‘புத சுக்ர யோகம்’, ‘புத ஆதித்ய யோகம்’ போன்ற யோகங்கள் செயல்படுகின்றன. இந்த யோகங்களால், விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படலாம். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பொதுநலனில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். வளர்ச்சியில் இடையிடையே தளர்ச்சி ஏற்பட்டாலும், அதை ஒரு வழியாக சமாளித்து விடுவீர்கள்.
செவ்வாய் -சனி பார்வை
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனியைப் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல. பூர்வீக சொத்துக்களில் சில பிரச்சினைகள் ஏற்டலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பிறருக்கு நன்மை செய்தாலும், தீமையாகவே முடியும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
ரிஷப - புதன் சஞ்சாரம்
ஏப்ரல் 28-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கின்றார். உங்கள் ராசிநாதனாகவும், சுக ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் புதன், விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், கடுமையான விரயம் ஏற்படும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால், காரியங்கள் எப்படியாவது கடைசி நேரத்தில் கைகூடிவிடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.
ரிஷப - சுக்ரன் சஞ்சாரம்
மே 8-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 12-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் விரய ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே சுப விரயங்கள் அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பார்த்தபடியே அமையும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாவதில் இருந்த பிரச்சினை குறையும்.
சனியின் வக்ர காலம்
மே 12-ந் தேதி முதல், மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி. அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் 9-க்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால் தந்தை வழி விரோதங்களை சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். எதிர்பாராத சில விரயங்களால் மனநிம்மதி குறையலாம்.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும், வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபாடு செய்யுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 14, 15, 20, 21, 25, 26, மே: 5, 6, 7, 10, 11 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் செவ்வாய் -சனி பார்வையால் விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் உருவாகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடன்பிறப்புகளின் குணமறிந்து செயல்படுவது நல்லது. தாய்வழி ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளுக்குரிய கடமைகளைச் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.
14.4.2021 முதல் 13.4.2022 வரை
மிதுனம்
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்படுங்கள்
(மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)
மிதுன ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு, உங்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தோடு பிறக்கின்றது. அதே நேரத்தில் கும்பத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே அஷ்டமத்துச் சனியால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும், பிரச்சினைகள் தொடர்ச்சியாக வந்துகொண்டுதான் இருக்கும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால்தான் விரயங்களில் இருந்து தப்பிக்க முடியும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சூரியனோடு இணைந்து புத - ஆதித்ய யோகத்தை உருவாக்குகின்றார். லாபாதிபதி செவ்வாய், விரயாதிபதி சுக்ரனோடு பரிவா்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார். இதன் விளைவாக விரயத்திற்கேற்ப லாபம் வந்து கொண்டேயிருக்கும். எந்த ஒரு காரியத்தையும் கையில் பணத்தை வைத்துக் கொண்டுதான் தொடங்க வேண்டும் என்பது நியதி. ஆனால் உங்களுக்கு ஆண்டு தொடக்கத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் காரியத்தை தொடங்கி விட்டால், உங்களது முயற்சியின் விளைவாக அதற்குரிய தொகை எப்படியாவது கிடைத்து விடும். கிரக நிலைகளின் பலத்தை அறிந்து அதற்குரிய தெய்வ வழிபாடுகளை யோகபலம் பெற்ற நாளில் செய்து கொள்ளுங்கள்.
6-ல் கேதுவும், 8-ல் சனியும் இருக்கும் இந்த வேளையில், சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கமும் மேலோங்கி இருக்கின்றது. எனவே இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், வாகன மாற்றம், தொழில் மாற்றம் போன்றவற்றில் ஏதேனும் ஒரு மாற்றத்தை சந்திக்க நேரிடும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருக்கும் பொழுது, எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்துச் செய்வது நல்லது. நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும்.
குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். மீண்டும் 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர். எனவே அவர் வக்ரம் பெறும் பொழுதெல்லாம் நன்மைகளே நடைபெறும். குறிப்பாக திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு, சாதகமான சூழல் உருவாகும்.
குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது குருவின் பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது.
உங்கள் ராசியில் பதியும் குரு பார்வையால், உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். திடீர் திருப்பங்கள் ஏற்படும்.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் வழக்குகள் சாதகமாக முடியும். வாய்ப்புகளை உபேயாகப்படுத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். சகோதர ஒற்றுமை பலப்படும். பொதுநலம் மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு, புதிய பொறுப்புகள் வரலாம். வெற்றிகள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இப்பொழுது நடைபெறும். உத்தியோகம் சம்பந்தமாக நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். இதுவரை பாகப்பிரிவினையில் தலையிட்ட மூன்றாம் நபர்கள் விலகிவிடுவர். நீங்களே நேரடியாக முடிவெடுத்து சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட தற்காலிக இடமாற்றம் மாறுதலுக்குள்ளாகும்.
மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் குரு வருகின்றார். எனவே அக்காலத்தில் விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. தொழிலில் திடீர் மாற்றங்கள் உருவாகலாம்.
ராகு-கேது பெயர்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை லாப ஸ்தானத்தில் ராகுவும், பஞ்சம ஸ்தானத்தில் கேதுவும் வருகிறார்கள். பொதுவாக 11-ல் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். தொழிலிலும் லாபம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்கு சென்று குடியேற நினைத்தவர்களுக்கு, கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் தேடி வரும். ‘இந்த தொழிலில் இவ்வளவு லாபமா?’ என்று ஆச்சரியப்படும் விதத்தில் தொழில் நடைபெறும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் இக்காலத்தில் மன நிம்மதி கொஞ்சம் குறையும். அதிக முயற்சி செய்தும் ஒரு சில காரியங்கள் தாமதப்படும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய்- சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் பகைக் கிரகங்களின் பார்வை இருப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர், திடீரென எடுக்கும் முடிவுகளால் செலவுகள் அதிகரிக்கலாம்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தோடு தொடங்குவதால், மனக்குழப்பம் அதிகரிக்கும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலமே வாழ்வில் அமைதி காண இயலும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். நிதிப் பற்றாக்குறை நீடிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது. சகப் பணியாளர்களால் தொல்லைகள் உருவாகும். சனிக்கிழமை விரதமும், அனுமன் வழிபாடும் சந்தோஷம் வழங்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்து வாருங்கள். மேலும் யோக பலம் பெற்ற நாளில் யோக நரசிம்மர் வழிபாட்டை மேற்கொண்டால் தேகநலம் சீராகும். செல்வ வளம் பெருகும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
அஷ்டமத்தில் வருகிறது சனி, அமைதிதான் தேவை இனி! மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. ஆயுள் ஸ்தானம், பிதுர்ரார்ஜித ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, 8-ம் இடம் சனிக்கு ஆட்சி வீடாகவும், சொந்த வீடாகவும் இருக்கின்றது. எனவே விரயங்கள் ஏற்பட்டாலும், சுப விரயங்களே அதிகரிக்கும். இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள், தொழில் மாற்றங்கள் இயற்கையாகவே வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை கொடுத்தாலும் மீண்டும் கடன் வாங்கும் அமைப்பு உருவாகும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். மனநிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் மனதிற்கு ஏற்ற விதம் அமையாது. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிப் போகலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். வாகனங்களாலும் தொல்லை ஏற்படும். இதை ஒரு சோதனைக் காலமாகக் கூடக் கருதலாம். இருந்தாலும் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், புத்திரப்பேறு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களில் அதன் பார்வை பதிவதால் அவற்றில் எல்லாம் மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக 2-ம் இடத்தில் சனியின் பார்வை பதிவதால், குடும்பத்தில் பிணக்குகள் அதிகரிக்கும்.
சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களாக சுய முடிவடுத்து ஏதேனும் காரியங்கள் செய்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க நேரிடும். சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பழைய தொழிலில் அக்கறை செலுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகலாம். இதுவரை உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருந்த உடன்பிறப்புகள் விலகக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு தனாதிபதியாக விளங்குவதால் தொழில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் வந்துசேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, துரித கதியில் முன்னேற்றங்கள் ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு, இடம், வாங்கும் யோகம் உண்டு. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். அங்ஙனம் சஞ்சரிக்கும்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மாறுகின்றது. எனவே இல்லம் தேடி இனிய பலன்கள் வரப்போகின்றது. அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பு கிடைக்கப் போகின்றது.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப் பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் தடைகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கூடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் மாற்றங் கள் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றங்கள் வந்து சேரலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சி காலம்
21.3.2020-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அப்பொழுது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால், வியாபார விருத்தி ஏற்படும். இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் முன்னேற்றம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் விஷ்ணு படம் வைத்து விஷ்ணு கவசம் பாடி வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாகவே அமையும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். உறவினர் பகை மாறும். 9-ம் இடத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால் ஒருசில சமயங்களில் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில், தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் தேவைப்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொண்டால் பிரச்சினைகள் ஏற்படாது. தாய் மற்றும் சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் வரலாம். விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திற்காகவும் செலவிடுவீர்கள். சனியின் வக்ர காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
பனிரெண்டில் ராகு வருகிறது..பல வழிகளில் விரயம் உண்டு..
மிதுன ராசி நேயர்களே!
செப்டம்பர் 1-ந் தேதி உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் அமரப்போகிறார்கள். ஜென்மத்தை விட்டு பாம்பு கிரகம் விலகும் பொழுது, நல்ல பலன்களை வழங்கும் என்பது ஜோதிட நியதி.
நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு பகவான் செல்கின்றார். அங்கிருந்து கொண்டு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு சனி வந்து அஷ்டமத்துச் சனியாக அமையப் போகின்றார். அதன்பிறகு நவம்பர் 2021-ல் கும்ப ராசிக்கு குரு செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியையும், மேலும் 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார்.
இடமாற்றங்களால் இனிமை தரும் ராகு!
எதிரிகளோடு போராட வைக்கும் கேது!
ராகு இப்பொழுது சஞ்சரிக்கப் போகும் இடம் 12-ம் இடமாகும். எனவே விரயங்கள் அதிகரிக்கும் என்பது பொது நியதி. இருப்பினும் 12-ம் இடம் என்பது பயணம், தியாகம், கடன் தீர்த்தல், இடமாற்றம், பணி நீக்கம், உடல்நலக் குறைபாடு, மனப்போராட்டம், மூதாதையர் சொத்துக்கள் போன்றவற்றையும் குறிக்கும் இடமாகும். எனவே அங்கு வரும் ராகுவால் உலுக்கி எடுத்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மாறும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். தூரதேசத்தில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விருப்பம் போல் அமையும்.
6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றின் தன்மையை அதிகரிக்கலாம். அதே நேரத்தில் புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணிநிரந்தரம் ஆகாதவர்களுக்கு பணிநிரந்தம் ஆகும். உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் உண்டு. ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல்நலச் சீர்கேடுகள் உண்டாகலாம்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நீடித்த நோய் அகல நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். செவ்வாய், உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி. உள்நாட்டில் உங்கள் தொழில், வளர்ச்சி அடைவது மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் அழைப்புகள் வரலாம்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியானவர் சந்திரன் ஆவார். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்குமிடம் இரண்டாமிடமாகும். அந்த இடத்திற்குரிய அதிபதியின் சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த நற்பலன்களைக் கொடுப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனக்குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். மக்கள் செல்வங்களின் கல்யாணக்கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி கைகூடும். வீடு கட்ட வேண்டும் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்க வேண்டுமென்று நீங்கள் நினைத்திருந்தால் அந்த எண்ணங்கள் ஈடேறும்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குறிப்பாகப் பெற்றோர்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வெற்றிக்குரிய ஸ்தானம் 3-ம் இடமாகும். அந்த இடத்திற்குரிய கிரகம் சூரியனாவார். அவரது சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, நன்மைகளை அதிகம் எதிர்பார்க்கலாம். வழக்குகள் சாதகமாக முடியக்கூடிய சூழ்நிலை உண்டு. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். சகோதர வழியில் திருமணம் முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அது நிறைவேறும். உத்தியோகம் மூலம் நீண்டதூரப் பயண வாய்ப்புகள் வரலாம்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப ஒற்றுமை பலப்படும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆயினும் தேக ஆரோக்கியத்தில் மட்டும் ஏதேனும் தொல்லை வந்து கொண்டே இருக்கும். உணவுக்கட்டுப்பாடு அவசியம் தேவை. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரலாம். தாயின் ஆதரவு கிடைக்கும். ‘இடம், பூமி வாங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் வீடுகட்டிக் குடியேற முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது தாமதங்கள் அகலும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவரது சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது பணப்புழக்கம் அதிகரித்தாலும் மனக்குழப்பம் கூடுதலாகவே இருக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையலாம். அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். வாகன மாற்றம் செய்ய விரும்புபவர்கள் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. மனஉறுதி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நேரமிது.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு பகவான், உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு வின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பர். தகராறுகள் தானாக விலகும். ‘மகப்பேறு கிட்டவில்லையே’ என்று ஏங்கும் தம்பதியர்களுக்கு அதுவும் கைகூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வீடு மாற்றங்கள், அல்லது உத்தியோக மாற்றங்கள் முறைப்படி நிகழும். ஒருசிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
வளர்ச்சி தரும் வழிபாடு
12-ம் இடத்து ராகுவால் பலன்கள் திருப்திகரமாகக் கிடைக்கவும், 6-ம் இடத்து கேதுவால் சீரான வாழ்க்கை அமையவும் உளுந்து, கொள்ளு ஆகியவற்றை அனுகூல நாளில் தானமாக கொடுக்கலாம். தேய்பிறை அஷ்டமியில் இல்லத்து பூஜை அறையில் யோக பைரவருக்குரிய பாடலைப் பாடி வழிபடுவது நல்லது.
பெண்களுக்கு...
ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் அன்றாடப் பணிகளைச் செவ்வனே செய்வீர்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும். உறவினர்களால் சில தொல்லைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். திருவாதிரை விரதமும், நடராஜர் வழிபாடும் நன்மை தரும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
எட்டில் வந்தது குரு பகவான், எதிலும் கவனம் இனி தேவை!
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 8-ம் இடத்திற்கு செல்கின்றார். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் தொடங்குகின்றது. மேலும் 8-ம் இடத்திற்கு வரும் குரு பகவான் நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். ‘கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறும்பொழுது, யோகத்தை வழங்கும்’ என்பது நியதி. எனவே, அஷ்டமத்து குருவால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் திடீர் இடமாற்றங்கள், தொழில் மாற்றங்கள், பிள்ளைகளால் பிரச்சினைகள், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத நிலை போன்றவை ஏற்படலாம். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் வாசல் தேடி வரும். இடர்பாடுகள் ஏற்படுமேயானால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக்கொள்ள இயலும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான், உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். அதே சமயம் விரய ஸ்தானத்தையும் பார்ப்பதால் வீண் விரயம் ஆகாமல் சுபவிரயமாகவும் அமைத்துக்கொடுக்கும். இல்லற வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது முதல் இல்லம் கட்டிக் குடியேறும் அமைப்பு வரை, சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டும் வல்லமை குருவின் பார்வைக்கு உண்டு. பற்றாக்குறை பட்ஜெட் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றமும் கிடைக்கலாம். கூட்டுக்குடும்பத்தில் இருந்த பிரச்சினை தீரும்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டு. அதைப் பராமரிக்கும் சூழ்நிலையும் உருவாகும். குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சகோதர வழியில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்திற்கு அதிபதியானவர் சூரியன். அதாவது சகோதர சகாய ஸ்தானத்திற்கு அதிபதி. அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சகோதர ஒற்றுமை பலப்படும். இதுவரை விலகி இருந்த உடன்பிறப்புகள் தானாக வந்து இணையலாம்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியாவார். 2-ம் இடம் என்பது தன ஸ்தானம் ஆகும். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். பகல், இரவாக பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மனக்கலக்கம் அகலும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியங்கள், இப்பொழுது படிப்படியாக நடைபெறும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக செவ்வாய் சாரத்தில் சஞ்சரிப்பதால், சில மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். உத்தியோகத்தில் ஒருசிலருக்கு பிரச்சினைகள் உருவாகலாம். சகப்பணியாளர்களால் தொல்லை உண்டு. உங்கள் முன்னேற்றத்தை முன்னதாகவே சொல்லப்போய் அதனால் பிரச்சினைகள் உருவாகும். உடல் நலனிற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. தொழிலில் நம்பிக்கைக்குரியவர்கள் அமைய மாட்டார்கள். ‘எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்புகளாலும் பிரச்சினை, உடன் இருப்பவர்களாலும் பிரச்சினை ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் உண்டு. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நில விற்பனை சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம், கவனம் தேவை.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை உங்கள் ராசியில் பதிந்து ராசியைப் புனிதப்படுத்துகின்றது. எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு தேடி வந்து கொண்டேயிருக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். குருவின் பார்வை 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் ஆதாயம் கிடைக்கும் நேரமிது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை, குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் எதைச் செய்தாலும் அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்கள் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். தொழிலில் பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடனை திருப்பிக் கேட்பதன் மூலம் உறவினர் பகை உருவாகிவிடும். பணியாளர்களும் திடீர் திடீரென விலக நேரிடும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் புதன்கிழமை தோறும் விஷ்ணு, லட்சுமி படம் வைத்து விஷ்ணுவிற்கு உரிய பதிகங்களைப் பாடி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதன் மூலமும் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி நன்மையும், தீமையும் கலந்த பெயர்ச்சியாகவே அமையும். அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாய் தந்தையரின் அன்பும், பாசமும் ஓரளவு கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் மேற்படிப்பு, கல்யாணம் போன்றவற்றை பெரும் பிரயாசை எடுத்தே முடிக்க இயலும். பணிபுரியும் பெண்களுக்கு திடீரென இடமாற்றங்கள் ஏற்படலாம். எதையும் யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. துர்க்கை வழிபாடு துயரம் தீர்க்கும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
4/20/2021 2:20:44 PM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Gemini