14.1.2021 முதல் 12.2.2021 வரை
விருச்சிக ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். தன - பஞ்சமாதிபதியான குரு பகவான் நீச்சம் பெற்றாலும் சனியோடு இணைந்து ‘நீச்சபங்க ராஜ யோக’த்தை உருவாக்குகிறார். எனவே, பண வரவு திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உங்களுக்கு ஏழரைச் சனி விலகிவிட்டதால், தொட்டது துலங்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
ஜென்ம கேதுவின் சஞ்சாரம்
இம்மாதம் ஜென்ம ராசியில் கேது சஞ்சரிக்கிறார். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பயணங்கள் பலன் தரும். சப்தம ஸ்தானத்தில் ராகு இருப்பதால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
கூட்டுக்கிரக சேர்க்கை
உங்களுக்கு மூன்றாமிடமான வெற்றிகள் ஸ்தானத்தில் குரு, சனி, சூரியன், சந்திரன், புதன் ஆகிய 5 கிரகங்கள் இணைந்திருக்கின்றன. இதன் பலனாக இல்லம் கட்டி குடியேறும் ஆசை நிறைவேறும். சகோதரர்களின் கடமைகளை முடித்துக் கொடுப்பீர்கள். தொழில் ஸ்தானாதிபதி சூரியன், சகாய ஸ்தானத்தில் குருவோடு இணைந்திருப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் பிறக்கும்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை, மகர ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியான புதன் வக்ரம் பெறுவதால், மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்ளுங்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகளின் வாயிலாக செலவு வந்துசேரும். இடம், பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். புதனின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு, பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், சனி பகவானோடு இணைந்து ‘நீச்சபங்க ராஜயோகம்’ அடைகிறார். எனவே கல்யாண முயற்சிகள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. ஜனவரி 22-ந் தேதி, குரு வலிமை இழப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம விரயாதிபதி மூன்றில் சஞ்சரிக்கும் பொழுது பயணங்களால் பலன் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள்.
இம்மாதம் வெள்ளிக்கிழமை விநாயகரையும், சனிக்கிழமை அனுமனையும் வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 17, 18, 28, 29, பிப்ரவரி: 1, 2, 3, 8, 9, 10 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் பொருளாதாரம் விருத்தியாகும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவி செய்வர். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பும், அவர்களால் ஆதாயமும் உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பணிபுரிபவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். மேலிடத்தில் இருந்து பாராட்டும் கிடைக்கும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்
(விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கு)
விருச்சிக ராசி நேயர்களே! எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு பிறக்கப்போகிறது. ஏழரைச்சனி விலகி இனிய பலன்தரும் நேரம் இது என்பதால், இனி தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ் மிக்கவர்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் குருச்சந்திர யோகம், நீச்சபங்க ராஜயோகம் போன்ற யோகங்கள் இருப்பதாலும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் மேஷத்தில் பலம்பெற்று சஞ்சரிப்பதாலும் இந்த ஆண்டு உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்தபடி இருக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
உங்கள் ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். அசையாச் சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுக்க முன்வருவர். புதுமுயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்கள் பலவும் செய்து காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் பகை மறந்து செயல்படுவர். அதுமட்டுமல்லாமல் உங்கள் பணிக்கும் உறுதுணையாகவும் இருப்பர். நகை வாங்குவது முதல் நல்ல வாகனம் வாங்கும் யோகம் வரை படிப்படியான முன்னேற்றம் ஏற்படும்.
ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் காலசர்ப்ப தோஷ அமைப்பு உள்ளது. எனவே சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்துகொள்வதன் மூலம் சந்தோஷ வாய்ப்புகளை எந்த நாளும் வரவழைத்துக்கொள்ள இயலும். ராசியிலேயே சுக்ரன் சஞ்சரிப்பதால் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் கோபம் அதிகம் வரலாம். தேவையில்லாத விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பதோடு, பதற்றத்தையும் குறைத்துக் கொள்வது நல்லது. 3-ல் புதன் இருப்பதால் மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் நட்புக்கு ஆளாகி முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வர். உயர்பதவியும், ஊதிய உயர்வும் கிடைக்கும் யோகம் உண்டு.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் நீச்சம் பெறுவதால் வருமானம் ஒருசில சமயங்களில் பற்றாக்குறையாகவும் இருக்கும். ஒருசில சமயங்களில் மிதமிஞ்சிய பொருளாதாரமாகவும் இருக்கும். சில காரியங்களைச் செய்யத் தொடங்கும் பொழுது, ‘பணத்தை கையில் வைத்துக்கொண்டு செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்பட வேண்டாம். காரியத்தைத் தொடங்கிவிட்டால் கடைசி நேரத்தில் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்துவிடும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒரு சிலரது குணம் மாறலாம். அவர்கள் கருத்துக்களை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். மாற்று இனத்தாரின் ஒத்துழைப்பால், உங்கள் கூட்டு முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
5-ம் இடத்திற்கு அதிபதியாக குரு பகவான் விளங்குவதால் அவர் மகரத்தில் சஞ்சரிக்கும் பொழுது ‘நீச்ச பங்க ராஜயோகம்’ பெற்றிருப்பதால் பிள்ளைகளின் உயர்கல்விக்காகவும், எதிர்கால முன்னேற்றம் கருதியும் செலவிடும் சூழ்நிலை உண்டு. பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணப்பொருட்கள் வாங்கி சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களிலிருந்து விடுபடலாம். வீட்டை விரிவு செய்து கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றிற்கு செலவிட்டு, இருக்கும் இடத்தைப் புதுப்பித்துக்கொள்ளலாம். ‘வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, கொடுக்கல்- வாங்கல்கள் இனி ஒழுங்காகும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதால் அந்த மூன்று இடங்களுக்குரிய ஆதிபத்யங்களும் சிறப்பாக நடைபெறும். இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். வசந்த காலம் உருவாக வழிவகை பிறக்கும். மங்கல ஓசை மனையில் கேட்கும். தொழில் வளர்ச்சியில் புதியவர்களின் பங்களிப்பு உண்டு. வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் வரலாம். ‘வாசல் தேடி வந்த வரன்களும் கைவிட்டுப் போகிறதே’ என்ற கவலை இனிமாறும். வந்த வரன்கள் உங்களுக்குப் பொருத்தமான வரன்களாக அமையலாம். தந்தை வழி உறவு வலுப்பெறும். தீர்த்த யாத்திரைகளும், தெய்வ வழிபாடுகளும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி வைக்கும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை இனி படிப்படியாகக் குறையும். பகையாக இருந்த நண்பர்கள் உறவாக மாறுவதோடு, பக்கபலமாகவும் இருப்பர். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில், குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தொழில் கூட்டாளிகள் லாபம் வரும் வழியை எடுத்துரைப்பர். அலுவலகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரத்தால் புகழ்பெறுவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகளை வாங்கி மகிழும் யோகம் உண்டு. அதே போல் வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது. ஒருசிலருக்கு வீடுகட்டிக் குடியேறும் யோகம் எதிர்பாராத விதத்தில் அமையும். சுபகாரியங்களை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கூடிவரும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் குரு பகவான் வக்ரம் பெறுவதால், செய்தொழிலில் கவனம் தேவை. வியக்கும் சம்பவங்கள் வீட்டில் அடிக்கடி நடைபெறலாம். ‘புது முயற்சிகளில் ஈடுபடுவோமா, வேண்டாமா?’ என்று இரட்டித்த சிந்தனை மேலோங்கும். பொதுவாக உங்களுடைய ராசி மனதுகாரகன் சந்திரன் நீச்சம் பெறும் ராசியாகும். எனவே சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். ‘இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா?’ என்ற மனக்குழப்பம் அதிகரிக்கும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகையைப் போராடி திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் வக்ரம் பெறும்பொழுது சுபச்செலவுகள் அதிகரிக்கும். ‘நடக்குமோ, நடக்காதோ’ என்று நினைத்த காரியம் திடீரென நடைபெறும். தேவையற்ற கடன்களை தவிர்ப்பது நல்லது. பணி இடத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமை தோறும் ஆனைமுகனுக்கு சிதறுகாய் உடைத்தால் துன்பங்கள் சிதறி ஓடும். பிள்ளைகளால் பெருமை உண்டு என்றாலும் பிரச்சினைகளையும் அடிக்கடி சந்திக்க நேரிடும். எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. கல்யாணக் கனவுகள் நனவாகும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறும்பொழுது சகோதரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் குணத்தில் மாற்றம் ஏற்படலாம். தட்டிக்கொடுத்தும் கொட்டிக்கொடுத்தும் வேலை வாங்க வேண்டிய நேரமிது. வாகனம், வீடு மற்றும் தெய்வ தரிசனங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தாயின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். பழைய கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள். செல்போன் வழி பேச்சுக்களால் செய்யும் தொழிலில் வரும் ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. சகோதரர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் உண்டு.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை செவ்வாய்-சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக செவ்வாய் உங்கள் ராசிநாதன் மற்றும் 6-ம் இடத்திற்கும் அதிபதி. அந்த செவ்வாயின் பார்வை சனி மீது பதிவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். அகால நேரத்தில் சாப்பிடுவது, அலைச்சலைக் கூட்டிக்கொள்வது போன்றவற்றை தவிர்த்தால், இக்காலத்தை நீங்கள் இனிய காலமாக மாற்றிக்கொள்ள இயலும். உத்தியோகத்தில் கொஞ்சம் வேலைப்பளு கூடும். சலுகைகளைக் கேட்டுப்பெற வேண்டிய சூழ்நிலை உருவாகும். செவ்வாய், சனிக்குரிய வழிபாடுகளை முறையாகச் செய்வது நல்லது.
வளர்ச்சி தரும் வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் கற்பக விநாயகர் படம் வைத்து, காரியசித்தி மாலை படித்து வழிபடுவது நல்லது. செவ்வாய்க்கிழமை அன்று வராஹியை வழிபட்டால் நலமும் வளமும் கிடைக்கும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பொன் கொழிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது. கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. தாய்வழி ஆதரவு, சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். அசையாச் சொத்துக்களை உங்கள் பெயரில் வாங்கி, கட்டிடம் கட்டும் யோகம் அமையும். பணிபுரியும் பெண்களுக்கு திறமை பளிச்சிடும். செவ்வாய்-சனி பார்வை காலத்தில் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பிள்ளைகளின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பைரவர் வழிபாடு வலிமை சேர்க்கும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஏழரைச்சனி விலகியது, இனிய வாழ்க்கை மலர்கிறது விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், 26.12.2020 அன்று முன்னேற்றத்தைக் கொடுக்கும் மூன்றாமிடத்திற்கு செல்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி விலகி விட்டது. எனவே இனி, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் தோள்கொடுத்து உதவுவர். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. வெற்றிகள் ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், இப்பொழுது வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உங்களின் நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு உங்கள் ராசிக்கு, தன -பஞ்சமாதிபதியாக விளங்குபவர். அவரோடு இப்பொழுது சனி பகவான் இணைந்து ‘நீச்சபங்க ராஜயோக’த்தை உருவாக்குகின்றார். எனவே மனம்போல மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செல்வச் செழிப்போடு கூடிய வாழ்க்கை மலரப்போகிறது.
வாய்ப்புகள் வாசல் தேடி வரும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி, முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல வைக்கப்போகிறார். இதுவரை ஏற்பட்ட தடைகளும், தாமதங்களும் அகலும். தனவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவை ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். சகோதர ஒற்றுமை பலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பதவி வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 5, 9, 12 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. சகாய ஸ்தானத்தில் வீற்றிருந்து பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், பயண ஸ்தானம் ஆகியவற்றைச் சனி பார்க்கிறார். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்ன என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கிடைத்து நிறைவான வாழ்க்கை உருவாகப் போகின்றது. குறிப்பாக திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும், வீடுகட்டிக் குடியேறும் அமைப்பும் மனம்போல நடைபெறும்.
சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.
சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், சுப விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்குவதால் புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். அதுமட்டுமல்லாமல் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, செய்யும் தொழில் சீராக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பிய வண்ணம் வந்து சேரும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வுகள் இப்பொழுது கிடைக்கும். குடும்பத்தை விட்டுப்பிரிந்து வேலைபார்த்து வந்தவர்கள், இனி ஒன்றுசேரும் வாய்ப்பு உண்டு. இக்காலத்தில் கும்ப ராசிக்கு சனி செல்கின்றார். அர்த்தாஷ்டமச் சனியாக சனி பகவான் வந்தாலும், கும்ப ராசி அவருக்கு சொந்த வீடு என்பதால் நன்மைகளையே வழங்குவார். சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி வருகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் திருப்தி தரும். மீனத்தில் குரு வரும்பொழுது, உங்கள் ராசியையே பார்க்கப் போகின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, கொஞ்சம் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். கொடுத்த கடன்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் புதியபாதை புலப்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வழக்கமான பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் அகலும். 12-ல் கேது சஞ்சரிப்பதால் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். ஆன்மிகத்திற்கு என்று அதிக தொகையைச் செலவிடு வீர்கள். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதோடு, சஷ்டி அன்று முருகப்பெருமானையும் வழிபட்டு வாருங்கள். இல்லத்து பூஜை அறையில் வராகி படம் வைத்து, வராகி கவசம் பாடி வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும். வளர்ச்சியும் அதிகரிக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரம் அடைகின்றார்.
இக்காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். எவ்வளவுதான் நன்மை செய்தாலும் குடும்பத்தினர் குறைகூறிக்கொண்டே இருப்பர். விரயங்கள் அதிகரிக்கும். அலைச்சலைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது, யோசித்து செயல்படுங்கள்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே இருக்கின்றது. ஏழரைச்சனி விலகி விட்டதால் இனி இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்துசேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகரிக்கும். கணவன் -மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதியும், கல்யாண முயற்சி கருதியும் நீங்கள் எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு, உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு. தாய் மற்றும் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
கேது உங்கள் ராசியிலே..கீர்த்தியும் புகழும் இனிச்சேரும்..
விருச்சிக ராசி நேயர்களே!
ராகு-கேதுக்களின் பெயர்ச்சி செப்டம்பர் 1-ந் தேதி நிகழவிருக்கின்றது. அந்த மாற்றத்தின் விளைவாக மிகுந்த நற்பலன் அடையும் ராசிகளில் ஒன்றாக உங்கள் ராசி அமைகிறது. காரணம், இதுவரை அஷ்டமத்தில் ராகுவும், 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேதுவும் நிலை மாறி ஜென்ம கேதுவும், சப்தம ராகுவுமாக வருகிறார்கள்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை தற்போது நடந்து வரும் ஏழரைச் சனி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. எனவே உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேறும். நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். அதன்பிறகு டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்குச் சனி செல்கின்றார். இப்பொழுது ஏழரைச் சனி முழுமையாக விலகிவிட்டது. எனவே தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். அதன்பிறகு 2021-ம் வருடம் நவம்பர் மாதம் 13-ந் தேதி கும்ப ராசிக்கு குரு செல்கின்றார். அப்பொழுது அவர் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார்.
நல்ல திருப்பம் தரும் ராகுநம்பிக்கைகள் நடைபெறும் கேது
ராகு இப்பொழுது சஞ்சரிக்கப் போகும் இடம் ஏழாமிடமாகும். இது ‘களத்திர ஸ்தானம்’ என்று அழைக்கப்படும் இடமாகும். எனவே திருமண வயது வந்த ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி நல்ல வரன்கள் வந்து சேரும். மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும் வாய்ப்பு உருவாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அரசியலில் செல்வாக்குள்ள ஒருவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழும் யோகமும் உண்டு.
ஜென்மத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். செலவுகளை யோசித்துச் செய்வீர்கள். சிறுசிறு விரயங்கள் வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதற்கேற்ற விதத்தில் வரவுகள் உங்களுக்கு வந்துசேரும். சமூகப்பற்று மிக்க உங்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கலாம். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் ஒருசில காரியங்கள் விரைவில் நடைபெறும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, வருமானம் கூடுதலாக இருக்கும். நவீன பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. தொழில் வெற்றிநடை போடும். கவுரவப் பதவிகள் கிடைக்கலாம். கட்டிடம் கட்டும் யோகமும் கைகூடும். உடல்நலம் சீராகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதி சந்திரன் ஆவார். பொதுவாக ஒன்பதாமிடம் என்பது பிதுர்ரார்ஜித ஸ்தானம் மட்டுமல்ல, ஞானம், கல்வி, தீர்த்த யாத்திரை, தெய்வ அனுகூலம், தந்தை வழி உறவுகள், தந்தைவழி சொத்துக்கள், ஆலயத்திருப்பணி, கடல் கடக்கும் வாய்ப்பு, பயணங்களால் பலன், பொன், பொருள் சேர்க்கை ஆகியவற்றை எல்லாம் குறிக்கும் இடமாகும். எனவே அதன் சாரத்தில் ராகு வரும்பொழுது எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தை வழி உறவில் ஆதாயம் உண்டு. ஊதிய உயர்வுடன் உத்தியோகம் அமையும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்குவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரப் போட்டிகள் அகலும். பணியாளர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ், கவுரவம் கூடும். அரசு வழிகளிலும் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவான் முதலில் புதன் சாரத்திலும், பிறகு சனி சாரத்திலும், அதன்பிறகு குரு சாரத்திலுமாக சஞ்சரிக்கப் போகின் றார். ‘நிழல் கிரகம்’ என்று வர்ணிக்கக் கூடிய கேது பகவான், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வாரா என்று பார்ப்போம். பாதசார அடிப்படையில் பகை கிரகத்தின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, அதற்குரிய பரிகாரங்களையும், வழிபாடுகளையும் செய்தால் நற்பலன்களைப் பெற முடியும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
புதன், உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாவார். எனவே தடைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். வியாபாரத் தொடர்புகள் விரிவடையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். சேமிப்பு அதிகரித்து சுபகாரியங்களுக்காகச் செலவிடுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மகத்தான பலன் கிடைக்கும். இளைய சகோதரத்தின் ஒத்துழைப்பு உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாகவும், லாபம் தரும் விதத்திலும் அமையும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனியின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, சகோதர ஒற்றுமை பலப்படும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடிவரும். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடல் தாண்டும் முயற்சி கைகூடும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். இடம், பூமியால் ஆதாயம் உண்டு. வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். உடல் நலம் சீராக உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு பகவான், உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதிஆவார். எனவே அவர் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது செல்வநிலை உயரும், செல்வாக்கு மேலோங்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். தேவைக்கேற்ற பணம் வந்துகொண்டே இருக்கும். மற்றவர்கள் பாராட்டும் படியான காரியங்களைச் செய்து மகிழ்ச்சியடைவீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஜென்ம கேதுவால் சிறப்பான பலன்களை பெறவும், சப்தம ராகுவால் சந்தோஷங்கள் அதிகரிக்கவும், சதுர்த்தியன்று விநாயகரையும், மூலம் நட்சத்திரமன்று அனுமனையும் வழிபடுங்கள். பூஜையறையில் சரஸ்வதி படத்துக்கு மாலை சூட்டி கலைவாணி கவசம் பாடி வழிபடுவதோடு, லட்சுமி படம் வைத்து அஷ்டலட்சுமி கவசமும் பாராயணம் செய்யுங்கள்.
பெண்களுக்கு...
ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகின்றது. உடல்நலம் சீராகும். ஏழரைச் சனி விலகுவதால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவும், சகோதர ஒற்றுமையும் சிறப்பாக உள்ளது. சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், ராகு-கேதுக்களுக்கு உரிய சிறப்பு வழிபாடும் முன்னேற்றம் தரும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
இரண்டில் வந்தது குரு பகவான், இனிமேல் வெற்றிக்கொடி பறக்கும்!
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று மூன்றாமிடத்திற்கு வருகின்றார். ‘3-ம் இடத்தில் குரு வரும்பொழுது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்’ என்பார்கள். 3-ம் இடத்தில் குரு நீச்சம் பெற்றாலும், அவர் பார்வை பதியும் இடங்கள் சிறப்பாக அமைவதால் சந்தோஷங்களையே நாளும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சியும், திருப்திகரமான வருமானமும் ஏற்படும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து நல்ல காரியங்களை முன்னின்று நடத்திக்கொடுப்பர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். இடையில் குரு பகவான் 4-ம் இடத்திற்கும் செல்கின்றார். சிலநாட்கள் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம்பெற்றிருப்பவர்களுக்கு தொழில் விருத்தியும், செல்வாக்கும் அதிகரிக் கும். வக்ர காலத்தில் வாழ்க்கைப் பாதை சீராக, குரு கவசம் பாடி, குரு பகவானை வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கின்றார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் பதிவதால் இல்லறம் நல்லறமாக அமையும். வாழ்க்கையில் வசந்தம் உருவாகும். மனையில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். ஏழரைச்சனி விலகும் நேரம் என்பதால் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீடு, வாகனங்கள் வாங்க உதவிகேட்டு விண்ணப்பித்திருந்தால், நல்ல பதில் இப்பொழுது கிடைக்கும்.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்ய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே, எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவு வலுப்பெறும். தீர்த்த யாத்திரைகள், தெய்வ வழிபாடுகள் போன்றவற்றில் நம்பிக்கை அதிகரிக்கும். முன்னோர்கள் கட்டிவைத்த ஆலய திருப்பணிகளை முறையாகக் கவனித்து, மக்கள் சேவையின் மூலம் மகத்தான புகழைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். ‘படித்து முடித்த படிப்பிற்கேற்ற வேலை இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.
குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால், லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். பணியாளர்கள் இப்பொழுது உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். சங்கிலித்தொடர் போல வந்த கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பூமி வாங்கும் யோகம் முதல் புதிய தொழில் தொடங்கும் யோகம் வரை எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். மூத்த சகோதரத்தின் அனுகூலம் உண்டு.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியானவர், சூரியன். அதாவது தொழில் ஸ்தானாதிபதியாக விளங்குகிறார். அவரது ஸ்தானத்தில் தன பஞ்சமாதிபதியான குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பொருளாதார நிலை உச்சம்பெறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை சம்பந்தமாக முயற்சி செய்திருந்தால், அதில் வெற்றி கிடைத்து உதிரி வருமானங்களும் வந்து சேரும். ‘பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது அவர்கள் எழுதும் தேர்வில் வெற்றி கிடைத்து அரசாங்க வேலை கிடைக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வும், கேட்ட சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதியானவர், சந்திரன். எனவே அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள், இப்பொழுது எளிதில் முடிவடைந்துவிடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவும், அருகில் உள்ள நண்பர்களின் ஆதரவும் கூடுதலாகக் கிடைக்கும் நேரமிது. தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலன் அளிக்கும். வெளிநாட்டு தொடர்புகளாலும் லாபம் உண்டு. என்றைக்கோ குறைந்த விலையில் வாங்கிப் போட்ட சொத்து, இப்பொழுது நினைக்க இயலாத அளவிற்கு விலை உயர்ந்து அதன் விற்பனை மூலம் ஒரு பெரும் தொகை உங்களுக்கு கிடைக்கலாம். எண்ணங்களுக்கு வலிமை தரக்கூடியவர் சந்திரன் என்பதால் இக்காலத்தில் நேர்மறைச் சிந்தனைகளையே அதிகம் நினைப்பது நல்லது.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆவார். தைரியகாரகன் என்றும், சகோதர பூமிகாரகன் என்றும் செவ்வாயை அழைப்பது வழக்கம். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதரர்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். முன்னோர் வழிச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆடை, அணிகலன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வதாகச் சொல்வார்கள். உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்னின்று நடத்திவைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றங்கள், இடமாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. குரு பார்வைக்கு பலன் அதிகம் என்பதால், அந்த மூன்று இடங்களுக்குரிய ஆதிபத்யங்களும் முன்னேற்றத்தை வரவழைத்துக் கொடுக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய சலுகைகள் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு இடமாறுதல்கள் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். வெளிநாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. தன பஞ்சமாதிபதியான குரு பகவான் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. குடும்பச்சுமை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அப்படி ஒப்படைத்தால் அது மீண்டும் உங்களிடமே வந்து சேரும். விரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கு அதிகம் விழிப்புணர்ச்சி தேவை.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் விநாயகப்பெருமான் படம் வைத்து, விநாயகர் கவசம் பாடி அவரை வழிபடுவதுடன், சதுர்த்தி விரதம் இருப்பதும் நன்மை தரும். மேலும் வியாழக்கிழமைதோறும் குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே உள்ளது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்பட்டு சச்சரவு வளராமல் பார்த்துக்கொள்வது நல்லது. பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை தரும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/18/2021 1:28:24 AM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Scorpio