நடிகை தீபிகா படுகோனே காதல் தோல்வி அனுபவம்


நடிகை தீபிகா படுகோனே காதல் தோல்வி அனுபவம்
x
தினத்தந்தி 22 Feb 2018 10:45 PM GMT (Updated: 22 Feb 2018 8:56 PM GMT)

தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் கபூரும் ஏற்கனவே காதலித்து பிரிந்தனர்.

இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் கபூரும் ஏற்கனவே காதலித்து பிரிந்தனர்.

இந்த காதல் தோல்வி தனக்கு மன அழுத்தம் ஏற்படுத்தியதாகவும், முறையான சிகிச்சைகள் பெற்று அதில் இருந்து மீண்டதாகவும் தீபிகா படுகோனே கூறியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்று பேசியதாவது:-

“மன அழுத்தம் நாட்டை பிடித்து இருக்கும் தொற்று வியாதி. முன்பை விட உலகம் முழுவதும் அதிகமாக இது பரவி வருகிறது. 3 பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. எல்லோருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அனுபவிக்கின்றனர். மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் சராசரி வாழ்வுக்கு திரும்பலாம்.

2014-ம் ஆண்டில் நானும் இதனால் பாதிக்கப்பட்டேன். வெற்றி தோல்விகள் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேச மாட்டார்கள். எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களை நெருங்கி கவனிக்க வேண்டும். கஷ்டத்தை தங்களிடம் சொல்லும் உரிமையை பெற்றோர்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களிலும் மனஅழுத்தத்தால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மனோதத்துவ நிபுணர்களை வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். எனது அம்மாவிடம் பிரச்சினைகளை நான் ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவேன். அதனால் காதல் தோல்வி காரணமாக நான் மன அழுத்தத்தில் இருந்தபோது டாக்டர்களை வைத்து சிகிச்சை அளித்து மருந்துகள் கொடுத்து அந்த பாதிப்பில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்தார்.

என்னைப்போல் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மன அழுத்தத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து உதவி வருகிறேன்.”

இவ்வாறு தீபிகா படுகோனே பேசினார்.

Next Story