ரஜினிகாந்த் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம். மக்களே நீதிபதிகள்! -விவேக் டுவிட்


ரஜினிகாந்த் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம். மக்களே நீதிபதிகள்! -விவேக் டுவிட்
x
தினத்தந்தி 6 March 2018 9:33 AM GMT (Updated: 6 March 2018 9:50 AM GMT)

அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! ரஜினிகாந்த் பார்போம். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்! என தனது டுவிட்டரில் விவேக் கூறி உள்ளார். #Rajinikanth

சென்னை 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் நேற்று திறந்து வைத்து, விழாவில் பேசினார். 
 அரசியலில் ஈடுபட போவதாக ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது.

இந்நிலையில், நடிகர் விவேக், ரஜினியின் பேச்சு பற்றி டுவிட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்த விழாவில் அவரின் பேச்சு தமிழ் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தன் மீது சமூக வலைதளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசினார் ரஜினி. எம்.ஜி.ஆர் ரஜினிக்கு உதவிய தருணங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த விழாவில் ரஜினியின் பேச்சு பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் விவேக். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம், இவை உண்மையாக இருந்தது.' என பதிவு செய்துள்ளார்.

'இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்ப்போம். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!' இவ்வாறு விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


Next Story