தீபிகா படுகோனே அணிந்த நகைகள் விற்பனைக்கு வந்தன


தீபிகா படுகோனே அணிந்த நகைகள் விற்பனைக்கு வந்தன
x
தினத்தந்தி 16 March 2018 10:37 PM GMT (Updated: 16 March 2018 10:37 PM GMT)

தீபிகா படுகோனே அணிந்த நகைகளை போன்ற டிசைன்கள் வட மாநிலங்களில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் ராணி கதாபாத்திரத்தில் வந்த தீபிகா படுகோனே அணிந்து இருந்த நகைகளுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. படத்தை பார்த்த அவர்கள் தீபிகாவின் நகைகளை பற்றியே பேசினார்கள். பழங்கால பாரம்பரிய வடிவத்தில் அந்த நகைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

தற்போது தீபிகா படுகோனே அணிந்த நகைகளை போன்ற டிசைன்கள் வட மாநிலங்களில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. பல நகைக்கடைகளில் இந்த வகை நகைகளை விற்பனைக்கு வைத்து இருக்கிறார்கள். திருமணங்களுக்கு இவற்றை வாங்கி செல்கிறார்கள். மணப்பெண்களும் இந்த நகைகளை அணிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

‘பத்மாவத்’ வகை நகைகள் அமோகமாக விற்பனையாவதாக மும்பை நகை வியாபாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story