காவிரி, தூத்துக்குடி பிரச்சினைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்-நடிகர் விவேக் வேண்டுகோள்
காவிரி, தூத்துக்குடி பிரச்சினைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், எனவே புதிய டிரெய்லர்களை வெளியிட வேண்டாம் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். #ActorVivek
சென்னை
இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது :-
அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள். மக்கள் அதை ரசிக்கும் மன நிலையில் இல்லை. கவனச் சிதறல் வேண்டாம். காவிரி, தூத்துக்குடி - இவையே நம் முன்னுரிமை. அன்பு அறவழி ஆனால் கொள்கையில் திண்மை! கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே. காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.
கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம். Success depends on the strong will of students n youth! Decide.
— Vivekh actor (@Actor_Vivek) 4 April 2018
அன்பு திரையுலக நண்பர்களே. எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள். மக்கள் அதை ரசிக்கும் மன நிலையில் இல்லை. கவனச் சிதறல் வேண்டாம். காவிரி, தூத்துக்குடி,-இவையே நம் முன்னுரிமை. அன்பு அறவழி ஆனால் கொள்கையில் திண்மை!
— Vivekh actor (@Actor_Vivek) 4 April 2018
Related Tags :
Next Story