முழு அடைப்பு காரணமாக தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து


முழு அடைப்பு காரணமாக தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து
x
தினத்தந்தி 5 April 2018 10:30 PM GMT (Updated: 6 April 2018 12:21 AM GMT)

முழு அடைப்பு காரணமாக தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.


மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ரெயில் மறியல், பஸ் மறியல்களில் அணி அணியாக ஈடுபட்டு அரசியல் கட்சியினரும் இளைஞர்கள், மாணவர்களும் கைதாகி வருகிறார்கள்.

நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தபட்டது. வணிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கடைகளை மூடினார்கள். அரசியல் கட்சியினர் மறியல் நடத்தினார்கள். பஸ்கள் குறைவாகவே ஓடின. இதனால் தியேட்டர்களுக்கு கூட்டம் வரவில்லை.

சென்னையில் உள்ள பல திரையரங்குகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்தன.

மாலை, இரவு காட்சிகள் வழக்கம்போல் நடந்தன. “தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் பந்த் காரணமாகவும் பார்வையாளர்கள் வராத காரணத்தாலும் தியேட்டர்களில் காலை, பகல் ஆகிய 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன” என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.

Next Story