தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா


தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார்  சட்டப்படி  நடவடிக்கை - நடிகை ஜீவிதா
x
தினத்தந்தி 18 April 2018 6:53 AM GMT (Updated: 18 April 2018 6:53 AM GMT)

நடிகை ஜீவிதா தனது கணவரின் பாலியல் ஆசைக்காக பல பெண்களை மிரட்டினார் என ஒரு பெண் பரபரப்பு புகார் தெரிவித்தார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவிதா கூறி உள்ளார்.

ஹைதராபாத்

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.

நடிகை ஜீவிதா தனது கணவர் டாக்டர் ராஜசேகரின் பாலியல் ஆசையை தீர்த்து வைக்க பல பெண்களை அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தியா கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமீர்பேட் பகுதியில் உள்ள வேலை பார்க்கும் பெண்களை ஜீவிதா மிரட்டி வந்தார். பல பெண்களை தனது கணவரின் பாலியல் ஆசையை தீர்க்க பயன்படுத்திக் கொண்டார். ஜீவிதா பெண்களை வெறும் போதைப் பொருளாக மட்டுமே பார்ப்பவர் என்று சந்தியா தெரிவித்துள்ளார். இது  திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து ஜீவிதா  ராஜசேகர் கூறியதாவது:-

நடிகையின் உண்மையான பிரச்சனை என்னவென்று  கேட்ட ஜீவிதா, தெலுங்குத் திரைப்படத் துறை  அவருக்கு என்ன கொடுக்கவில்லை என  கேள்வி எழுப்பினார்.ஸ்ரீ ரெட்டியின் உண்மையான கோரிக்கை என்னவென்று தெளிவாக தெரியவில்லை. பேஸ்புக்கில் பதிவேற்றிய ஸ்ரீ ரெட்டிக்கு சொந்தமான வீடியோவை ஜீவிதா சுட்டிகாட்டினார். வீடியோவில் ஸ்ரீ ரெட்டி கூறியது 24 * 7 நான் கவர்ச்சியான மனநிலையில் இருப்பேன் என்பதை கூறி உள்ளதை சுட்டி காட்டினார்.

ஜீவிதா ராஜசேகர்  நடிகர் கண்டிப்பாக இவர்கள் மீது  சட்டப்பூர்வ வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய டிவி மற்றும் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளார். 

Next Story