ஆபாச வீடியோ வெளியிடுவாரா? நடிகர் நானிக்கு ஸ்ரீரெட்டி திடீர் மிரட்டல்
நடிகர் நானியின் மோசமான படங்கள் விரைவில் வெளியாகப் போகிறது என்று ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய திரையுலகை திக்குமுக்காட வைத்தது. பிரபல டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகை ஜீவிதாவின் கணவரும் நடிகருமான ராஜசேகர் ஆகியோர் அவரது செக்ஸ் புகார் சர்ச்சையில் சிக்கினார்கள். சமூக வலைத்தளத்தில் ஸ்ரீலீக்ஸ் பக்கத்தை உருவாக்கி ஆபாச படங்களையும் வெளியிட்டார்.
தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். அவருக்கு படங்களில் நடிக்க தடை விதித்தனர். மகளிர் ஆணையம் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக களம் இறங்கியதும் தடையை வாபஸ் பெற்றனர். பெண்கள் சங்கமும் ஸ்ரீரெட்டி பக்கம் நிற்கின்றன. திரையுலகில் நடக்கும் செக்ஸ் துன்புறுத்தல்கள் குறித்து அரசும், தெலுங்கு நடிகர் சங்கமும் குழுக்கள் அமைத்து விசாரிக்கின்றன.
சில நாட்கள் அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி இப்போது மீண்டும் செக்ஸ் புகார் கிளப்பி உள்ளார்.
தமிழில் வந்த நான் ஈ படத்தில் நடித்து பிரபலமான நானியும் இதில் மாட்டினார். நானி ஒரு பெண் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளி விட்டார். பல பெண்கள் அவரால் ஏமாந்து உள்ளனர் என்றார்.
நடிகர் நானியின் மோசமான படங்கள் விரைவில் வெளியாகப் போகிறது அதை காண காத்திருங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது பட உலகை அதிர வைத்துள்ளது.
நானியின் ஆபாச வீடியோ ஸ்ரீரெட்டியிடம் இருக்கலாம் என்றும் அதை வெளியிடப்போவதாகத்தான் அவர் மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் தெலுங்கு பட உலகினர் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
Related Tags :
Next Story