ஐஸ்வர்யா ராயுடன் மோதலா? –அபிஷேக் பச்சன் விளக்கம்


ஐஸ்வர்யா ராயுடன்  மோதலா? –அபிஷேக் பச்சன் விளக்கம்
x
தினத்தந்தி 24 July 2018 11:00 PM GMT (Updated: 24 July 2018 7:10 PM GMT)

ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இஐஸ்வர்யா ராய் , அபிஷேக் பச்சன், மோதல்ருக்கிறார்.

ஐஸ்வர்யாராய்க்கும், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் காதல் ஏற்பட்டு 2007–ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஐஸ்வர்யாராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல உறவு இல்லை என்று தகவல் பரவியது. அபிஷேக்பச்சன் தாய் ஜெயபாதுரிக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடப்பதாகவும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சன் சகோதரி சுவேதாவுக்கும் ஐஸ்வர்யாராயை பிடிக்கவில்லை என்று பேசப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வேறு நடிகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பதை அபிஷேக் பச்சன் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. மாமியார் சண்டை காரணமாக மும்பையில் ரூ.21 கோடியில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாராய் வற்புறுத்தியதாகவும் கூறினர்.

இந்த நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது.

இதற்கு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், ‘‘தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்’’ என்று கூறியுள்ளார்.

Next Story