“முத்த காட்சிக்கு மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன்” -கீர்த்தி சுரேஷ்


“முத்த காட்சிக்கு மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன்” -கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 30 July 2018 10:30 PM GMT (Updated: 30 July 2018 6:56 PM GMT)

சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் சொல்கிறார்:-

“திரையுலகில் என்னை விட அழகும் திறமையும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே நேரம் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன். முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் அந்த பட வாய்ப்புகள் கைநழுவி போய் விட்டன.

எனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையாக இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்கவும் முடியாது.”

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

Next Story