வெயில், மழையில் கஷ்டப்பட்டு நடித்தேன் ‘‘பேசிய சம்பளம் தராமல் ஏமாற்றினார்கள்’’ நடிகை கஸ்தூரி புகார்


வெயில், மழையில் கஷ்டப்பட்டு நடித்தேன்  ‘‘பேசிய சம்பளம் தராமல் ஏமாற்றினார்கள்’’  நடிகை கஸ்தூரி புகார்
x
தினத்தந்தி 3 Aug 2018 10:45 PM GMT (Updated: 3 Aug 2018 6:48 PM GMT)

பேசிய சம்பளம் தராமல் ஏமாற்றினார்கள் என்று நடிகை கஸ்தூரி புகார் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி 1990–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். ஆத்தா உன் கோவிலிலே, செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, சின்னவர், புதிய முகம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

சமீபத்தில் திரைக்கு வந்த தமிழ் படம்–2–ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். சமூக, அரசியல் வி‌ஷயங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டும் வருகிறார். காஞ்சீபுரம் கோவில் சிலை மோசடி விவகாரம் பற்றி டுவிட்டரில் பேசினார். அதில் ‘‘அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி, திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். 

ஒரு ரசிகர், ‘‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘‘நான் வரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு வி‌ஷயத்துல ஏய்ச்சிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம். தமிழ் படம்–2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம். அதுபோலத்தான்’’ என்று கூறியுள்ளார். 

கஸ்தூரி ஏமாந்ததை கேட்டு ரசிகர்கள் அவர் மீது பரிதாபப்பட்டு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story