டி.வி தொடருக்கு வந்த ஜெயப்பிரதா


டி.வி தொடருக்கு வந்த ஜெயப்பிரதா
x
தினத்தந்தி 24 Aug 2018 10:45 PM GMT (Updated: 24 Aug 2018 6:45 PM GMT)

தமிழ், தெலுங்கு, இந்தியில் 1980–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெயப்பிரதா.

கமல்ஹாசனுடன் நடித்த நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் படங்கள் பெரிய வெற்றி பெற்றன. கடைசியாக கேணி படத்தில் நடித்து இருந்தார். பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். தற்போது ஜெயப்பிரதா டி.வி தொடருக்கு வந்துள்ளார்.

இந்தியில் வெளியாகும் ‘பெர்பக்ட் பதி’ என்ற டி.வி தொடரில் அவர் நடிக்கிறார். இதில் முற்போக்கு சிந்தனை கொண்ட மாமியார் வேடத்தில் வருகிறார். டி.வி நடிகையானது குறித்து ஜெயப்பிரதா கூறியதாவது:–

‘‘டி.வி தொடர்கள்தான் கிராமத்து மக்கள்வரை அதிகமாக சென்று அடைகிறது. நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை இந்த தொடர்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம். நான் தற்போது நடிக்கும் டி.வி தொடரில் முற்போக்கு சிந்தனை உள்ள மாமியாராக வருகிறேன்.

பொதுவாக டி.வி தொடர்களில் மாமியாரை எப்படி காண்பிக்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.  ஆனால் நான் நடிக்கும் தொடரில் என்னுடைய கதாபாத்திரம் அப்படி இருக்காது. அதனால்தான் இதில் நடிக்க சம்மதித்தேன்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பொருத்தமான துணை அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொல்லுவதாக எனது கதாபாத்திரம் இருக்கும். தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறேன்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story