திருமண விழாவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்ட நடிகர் விஜய்


திருமண விழாவில்  ரசிகர்கள்  கூட்டத்தில் சிக்கி கொண்ட நடிகர் விஜய்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:57 AM GMT (Updated: 15 Sep 2018 10:57 AM GMT)

திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார்.



நடிகர் விஜய் தற்போது சர்க்கார் திரைப்பட ஷுட்டிங்கை முடித்துவிட்டு, அட்லி இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

தெளிவான பார்வை, நிதானமான பேச்சு, தொலைநோக்கு சிந்தனை, தன்னுடைய ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் மூலம் சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் திரையில் மட்டுமல்லாமல் தரையிலும் வெகுவாக விரும்பக்கூடிய மனிதராக வலம் வருகிறார் விஜய்.

விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் பகுதி அருகே உள்ள சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

விஜய் மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்துவார் என அறிவிக்கப்பட்டதால், பல ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு மண மேடையில் ஏறியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதற்காக புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள், அவரை வரவேற்க, கட்அவுட், போஸ்டர்கள், என திரும்பிய பார்க்கும் இடமெல்லாம் விஜய் படங்கள் இருக்கும் அளவிற்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

தன் மனைவி சங்கீதாவுடன் மணமேடை வந்தபோது மணமக்களை வாழ்த்தியபோது ரசிகர்களின் நெரிசலை பவுன்சர்களாலும் சமாளிக்க முடியவில்லை. அதனால் விஜய்யின் காலில் லேசான காயம் பட்டது. மண்டபத்திலிருந்து வெளியே வந்தபோதும், ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்ததால் பரபரப்பு நிலவியது. பிறகு காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து விஜய்யை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.


Next Story