விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ஸ்ரேயா


விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ஸ்ரேயா
x
தினத்தந்தி 17 Sep 2018 10:28 AM GMT (Updated: 17 Sep 2018 10:28 AM GMT)

விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரேயா. திருமணம் செய்து கொண்டாலும் வெளிநாட்டில் செட்டில் ஆகவில்லை.

திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே போன்று தான் தற்போதும் உள்ளார் ஸ்ரேயா. அவர் எப்பொழுதுமே கவர்ச்சியாக உடை அணிவார். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சமந்தா கூட திருமணத்திற்கு பிறகு பிகினி புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் நடந்த சினிமா விருது விழாவில், நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த உடை ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

சினிமா விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரேயா கலந்து கொண்டு நடனம் ஆடினார். விருது விழாவில் நடனமாடப் போவதை சமூக வலைதளத்தில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஸ்ரேயா லோ கட் கவுன் அணிந்து விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த லோகட்  லோவாக இருந்ததால் பார்ப்பவர்கள் நெளிய வேண்டியதாக இருந்தது.

புகைப்படம் கூட பரவாயில்லை எனலாம். ஸ்ரேயா குஷியில் தனது இடுப்பை ஆட்டி ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்க்க மிகவும் மோசமாக உள்ளது. திருமணத்திற்கு பிறகு இதெல்லாம் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Next Story