தீபிகா படுகோனே திருமணம் தள்ளிவைப்பு


தீபிகா படுகோனே திருமணம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 23 Sep 2018 11:30 PM GMT (Updated: 23 Sep 2018 5:26 PM GMT)

‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

ராணி பத்மினியாக நடித்த பத்மாவத் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து வசூல் குவித்தது. அதோடு படத்துக்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டங்களும் நடந்தன.

தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. தீபிகா படுகோனேவும் பிரபல இந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் 2 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சென்று வருகிறார்கள்.  இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் இந்தி பட உலகில் பேசினர்.

வருகிற நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இத்தாலியில் திருமணத்தை முடித்து விட்டு மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தனர். திருமணம் முடிந்ததும் தங்குவதற்காக மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு தளங்கள் உள்ள சொகுசு வீட்டை விலைக்கு வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர்சிங்கும் தங்கள் திருமணத்தை திடீரென்று தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் படங்களில் தீவிரமாக நடித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறுகின்றனர். அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story