சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதியானேன் - கமல்ஹாசன்


சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதியானேன் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 12 Oct 2018 11:28 AM GMT (Updated: 12 Oct 2018 11:28 AM GMT)

சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதி ஆகியுள்ளேன் என கமல்ஹாசன் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் குமாரபாளையத்தில் சிவாஜி கணேசன் நூலக கட்டட திறப்பு விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

பள்ளிகளுக்குள் தம்மை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு அரசாணையே இருப்பதாகவும் ஆனால் மாணவர்கள் வெளியே வரும்வரை தாம் காத்திருப்பேன்.  அரசியல் யாத்திரை தொடங்கியது முதலே எனக்கு பள்ளிக்குள் செல்ல அனுமதி இல்லை.  பள்ளிக்கு வெளியே காத்திருந்து அங்கிருந்து வெளிவருபவர்களை சந்திப்பேன்.

மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் நல்ல அரசியலைப் பற்றிப் பேச மாணவர்களைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது.

சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதி ஆகியுள்ளேன் என கூறினார்.

Next Story