காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது -கமல்ஹாசன்
காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சென்னை
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது இப்போது முடிவு எடுக்கமுடியாத ஒரு விஷயம். காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது.
சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை.
துரைமுருகன் நடிப்பு எனக்கு பிடிக்காது, ஆளும் கட்சியினர் பதற்றம் காரணமாக என்னை விமர்சனம் செய்கின்றனர். லோக்சபா தேர்தலில், போட்டியிடுவது குறித்து கட்சியினருடன் பேசி முடிவு செய்யப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story