தைரியம் இல்லாத பல மக்களுக்கு சமூக ஊடகங்கள் வெளியே வந்து பேசுவதற்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது - தனுஸ்ரீ தத்தா


தைரியம் இல்லாத பல மக்களுக்கு சமூக ஊடகங்கள் வெளியே வந்து பேசுவதற்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது - தனுஸ்ரீ தத்தா
x
தினத்தந்தி 23 Oct 2018 10:57 AM GMT (Updated: 23 Oct 2018 10:57 AM GMT)

மீ டூ தைரியம் இல்லாத பல மக்களுக்கு சமூக ஊடகங்கள் வெளியே வந்து பேசுவதற்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது என தனுஸ்ரீ தத்தா கூறி உள்ளார்.

மும்பை,

தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

இந்த பரபரப்பான நிலையில்  நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த  சம்பவத்தில்  பல நடிகர் நடிகைகள் அவருக்கு  ஆதரவு அளித்தனர்.  

தனுஸ்ரீ தத்தா புகாருக்கு பின் பல நடிகைகள்  தொடர்ந்து பலர் மீது புகார்களை கூறத் தொடங்கி உள்ளனர்.

தனுஸ்ரீ தத்தா இந்தியாவின் # மீ டூ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் நடிகையாக உள்ளார். பாலிவுட், ஊடகங்கள், அரசியல் மற்றும் பொது பணியிடங்களில் மிகவும் தேவையான சீர்திருத்தம் பற்றி விவாதிக்க இது உதவியது.

தனுஸ்ரீ  தத்தா அஜ் தக் மும்பை மந்தான் 2018 இல் மீ டூ  இயக்கத்தின் முகமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நானா உட்பட  நான்கு நபர்களால் நான் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டேன். 10 ஆண்டுகளுக்கு பின்னர் அது தற்போது  பரபரப்பை ஏற்படுத்தியது. நான் ஏமாற்றமடைந்தேன். நான்  பல கதவுகளை தட்டினேன், பதில் இல்லை. ஒரு சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துரையாடினேன். இப்போது  நாட்டில் குரல்  உயர்ந்துள்ளது. தொடர்ந்து வந்த அனைத்தும்  எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

#மீ டூ இயக்கம் உலகெங்கிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு உள்ளது .   இந்தியாவில், எங்கள் சமுதாயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி பேச முடியவில்லை.  இத்தகைய வெளிப்பாடுகளை நிராகரிக்க முற்படுகிறது. நான் அதை தான் நேரம் என்று நினைக்கிறேன். மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொரு தருணத்திலும் மாறி வருகிறோம். இன்னும் பல பெண்கள் பேசத் தயங்குகிறார்கள். அவர்கள் இன்னும் பயத்தில் உள்ளனர். இப்போது நீங்கள் பார்ப்பது பனி முனைதான்.   ஒரு மாற்றத்திற்கான  வெடிப்பு என்று   நான் இதை அழைக்க மாட்டேன், ஆனால் நீங்கள் எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் இடையிலான  பார்வையில் மாற்றம் வரும்.

19, 20 வருடங்களுக்கு பிறகு பேசுகிற பல பெண்கள் இருக்கிறார்கள். இது முறையாக நடக்கிறது என்று நமக்குத் தெரியும். நபர் சரியான நேரத்தில் தான் உணரும் போது, அது சரியான நேரமாகும்.

நான் முதலில் ஒரு எப் ஐ ஆர் தாக்கல் செய்தபோது, நடந்தது எல்லாம் ஓவ்வொரு நிமிட கணக்கில் போலீசாரிடம் தெரிவித்தேன் . என் புகார் எஃப்.ஐ.ஆரில் முடிவடையவில்லை. 2008 ஆம் ஆண்டு என் புகார் சம்பவத்தின் ஒவ்வொரு விவரத்தையும் கொண்டிருந்தது.

சராசரி இந்தியப் பெண்ணுக்காக  ஒரு குரல் கூட இல்லை. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் - நான் அருவருப்பான அணுகுமுறை பார்த்திருக்கிறேன். முன்னோக்கி வந்த நிறைய பெண்கள்  அவர்கள் வெளியே துரத்தப்பட்டு உள்ளனர்.

சமூக ஊடகங்கள் வெளியே வந்து பேசுவதற்கு தைரியம் இல்லாத பல மக்களுக்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது. பிரச்சினைகள் பற்றி நாம் உணர வேண்டும். நீங்கள் ரோபோக்கள் அல்ல, நீங்கள் பேசுகிற மனிதர்கள். சமூக ஊடக வசதியாக உள்ளது.

அரசியல் என்னுடையது அல்ல. நிச்சயமாக நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனக்கு நிறைய உதவ முடியும் என்று நினைக்கிறேன். நான் உள்ளுணர்வு மற்றும் வெளியுணர்வுடன் செயல்படுகிறேன். 

இது ஒரு சர்ச்சைக்குரியது, ஒரு மறுமலர்ச்சி அல்ல, அதை நீங்கள் கடந்து செல்ல காத்திருக்கிறார்கள் - அதை நீங்கள் ஒரு சர்ச்சைக்குரியதாக கருதுகிறீர்கள். 

பெரிய நட்சத்திரங்களுக்கு சங்கடமானதாக உள்ளது. அவர்களில் சிலர் உடந்தையாக உள்ளனர். நிறைய பேரிடம்  என் தொலைபேசி எண் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story