கவர்ச்சி புகைப்படங்கள்: கவுரமாக வாழ விடுங்கள் - அக்‌ஷராஹாசன் வேண்டுகோள்


கவர்ச்சி புகைப்படங்கள்: கவுரமாக வாழ விடுங்கள் - அக்‌ஷராஹாசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 Nov 2018 9:51 AM GMT (Updated: 8 Nov 2018 9:51 AM GMT)

கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது எனது மனதை பாதித்து விட்டது என்றும் கவுரமாக வாழ விடுங்கள் என அக்‌ஷராஹாசன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை,

உள்ளாடைகள் மட்டுமே அணிந்தபடி கமல்ஹாசனின் இரண்டாவது மகள்  அக்‌ஷராஹாசனின் கவர்ச்சியான படங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்தன . மேலும் சமூக வலைதளங்களிலும் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பல விமர்சனங்களும் வெளியானது.

இந்நிலையில், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியிட்டவரை கண்டுபிடிக்க வேண்டும் என மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இவர் வெளியிட்டுள்ள வேண்டுகோளில் , மீ டூ இயக்கம் நாட்டை விழிப்படையச் செய்துள்ள நிலையில், இன்னும் சிலர் இது போன்று ஒரு இளம் பெண்ணின் தனிப்பட்ட படங்களை பரப்பி மகிழ்வது வேதனை அளிக்கிறது.

நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால், ‘‘நாமும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும், அடுத்தவர்களை கவுரவமாக வாழ விடவேண்டும். இணையதள உலகம் இது போல் என்னை தொந்தரவு செய்வதை தொடராது என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Next Story