எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி


எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி
x
தினத்தந்தி 15 Nov 2018 10:06 AM GMT (Updated: 15 Nov 2018 10:32 AM GMT)

புதிதாக ஒரு செய்தி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முதல்வர், துணை முதல்வர் இணைந்து சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான  விஷால் சமூகவலைதளப் பக்கத்தில், 

புதிய செய்தி  சேனல் ஒன்றை உருவாக்க, எக்கச்சக்கமான பணம் தேவை என்று கூறப்படும் நிலையில், மாத சம்பளம் வாங்கும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களால் எப்படி ஒரு செய்தி சேனலை உருவாக்க முடிகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது பதிவின் முடிவில், 2019-ஆம் ஆண்டிற்காக காத்திருப்பதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

Next Story