தாதா கும்பலுடன் தொடர்பா? நடிகை லீனா மரியா வாக்குமூலம்


தாதா கும்பலுடன் தொடர்பா?  நடிகை லீனா மரியா வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Dec 2018 9:45 PM GMT (Updated: 17 Dec 2018 5:29 PM GMT)

பிரபல மலையாள நடிகை லீனா மரியா. இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்திலும் நடிகை லீனா மரியா நடித்துள்ளார். சென்னையில் உள்ள வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர். 

இவர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தார். அங்கு லீனா மரியா பாலுக்கு சொந்தமாக பியூட்டி பார்லர் உள்ளது. பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பியூட்டி பார்லரில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். அப்போது லீனா மரியா கடையில் இல்லை. 2 பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.  லீனா மரியாவுக்கு 9 சொகுசு கார்களும், பல வீடுகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாபியா கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தினர். லீனா மரியா அளித்த வாக்குமூலத்தில் ‘‘சில வாரங்களுக்கு முன்பு மும்பை தாதா ரவி புஜாரா என்ற பெயரில் எனக்கு போன் வந்தது. ரூ.25 கோடி தரவேண்டும் என்று அவன் மிரட்டல் விடுத்தான். அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து 4 முறை மிரட்டல்கள் வந்தன. அதன்பிறகு போலீசில் புகார் அளித்தேன். மாபியா கும்பல் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறது’’ என்று கூறியுள்ளார். 

Next Story