பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து


பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து
x
தினத்தந்தி 23 Dec 2018 10:45 PM GMT (Updated: 23 Dec 2018 9:23 PM GMT)

பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து தெரிவித்துள்ளார்.


தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதிராவ். தற்போது உதயநிதியுடன் ‘சைக்கோ’ படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் விசாகபட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும்போது படுக்கைக்கு சம்மதிக்காததால் பட வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“என்னை வீட்டில் கட்டுப்பாட்டுடன் வளர்த்து இருந்தனர். இதனால் சினிமா துறைக்கு வந்ததும் எதுவும் புரியாத அப்பாவியாக இருந்தேன். பட உலகில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பது பற்றியும் எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அவை நடந்து கொண்டு இருந்தன. எனக்கு அதுபோன்று மோசமான பெரிய அனுபவம் நிகழாவிட்டாலும் ஒரு சம்பவம் நடந்தது.

பட வாய்ப்பு வேண்டுமென்றால் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றனர். நான் அப்படிப்பட்ட படவாய்ப்பு தேவை இல்லை என்று கூறிவிட்டு சென்று விட்டேன். அந்த சம்பவத்துக்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு படங்கள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள்.

நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். இப்போது ‘மீ டு’ இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது. இவ்வாறு அதிதிராவ் கூறினார்.


Next Story