தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும்-செய்தி தொடர்பாளர் குஷ்பு


தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும்-செய்தி தொடர்பாளர் குஷ்பு
x
தினத்தந்தி 25 Dec 2018 8:41 AM GMT (Updated: 25 Dec 2018 8:41 AM GMT)

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என்று அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்படுகிறது. தற்போது திருநாவுக்கரசர் அமெரிக்காவில் இருக்கிறார்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். அவரை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவரும் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாக வந்திருக்கிறார். அரசியல் பற்றி நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

கேள்வி:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை சுயநல கூட்டணி என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளாரே.

பதில்:- இதை சொல்வதற்கு முன்பு அவரது கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் உள்ள தலைவர்களிடையேயும் நிலவும் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டும்.

எங்கள் கூட்டணி சுயநல கூட்டணியா? மக்கள் நலக் கூட்டணியா? என்று மக்கள் சொல்வார்கள்.

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. பாஜக தேர்தல் தோல்வியில் இருந்தே இன்னும் மீளவில்லை. முதலில் அவர்கள் அதில் இருந்து மீளட்டும். பின் எங்களை பற்றி பேசட்டும். அவர்கள் தோல்வியை தாங்க முடியாமல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என்பதை கேள்விப்பட்டேன். மாற்றம் வரும் பார்ப்போம்.

இவ்வாறு குஷ்பு கூறினார். 

Next Story